“நேத்து அந்த கிருஷ்ணவேணி யாரோ ஒரு பணக்காரனோடு ரொம்ப நெருக்கமாய் காரில் ஏறிப்போனாள். அந்த ஆள் யாருன்னு உனக்குத் தெரியுமா?”
அவன் தன் அண்ணனைப் பார்த்தான்.
அவன் முகத்திலும் கேள்வி இருந்தது.
“அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு நீ பதில் சொல்லு சாருக்கா? கிருஷ்ணவேணி ஒரு பணக்கார ஆணோட நெருக்கமா காரில் ஏறிப்போனதைப் பற்றி யார் உன்கிட்ட சொன்னா?”
“அதை யாராவது வந்து சொல்லியிருந்தா நாங்க நம்பியிருக்கவே மாட்டோம். இல்லையா அத்தான்?”
அவள் தன்னுடன் மகேந்திரனையும் கூட்டுச் சேர்த்தாள்.
“அப்படின்னா அவ போனது உங்களுக்கு எப்படி தெரியும்?”
கூர்மையான விழிகளுடன் பார்த்தவாறே அவளிடம் கேட்டான்.
“நாங்கதான் நேராவே பார்த்தோம்.”
“உங்களுக்கு எங்கள் கல்லூரி இருக்கும் இடம் சம்பந்தமே இல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்பிவிட்டனர்.
பருவத் தேர்வுகள் தொடங்கிவிட்டன. இன்னும் ஒரேயொரு பருவம் முடிந்துவிட்டால் அவர்கள் பட்டம் பெற்றுவிடலாம்.
கிருஷ்ணவேணியும் யுகேந்திரனும் படிப்பில் கவனம் செலுத்தினர். அவன் கொஞ்சம் சோம்பியிருந்தாலும் அவள் விடவில்லை.