அவள் கண்மூடவும், அதனை சம்மதமாக எண்ணி அவன் தன் வேலையை தொடர்ந்தான் அவள் இதழில். முதலில் மென்மையாக தொடங்கிய இந்த இதழ் யுத்தம் ஆனது பின்பு வன்மையாக மாறியது. அவன் கைகள் அவள் மேனியில் அத்துமீறவும் சுதாரித்த அனந்திதா அவன் நெஞ்சில் கைவைத்து அதனை உணர்த்தினாள்.
தான் செய்து கொண்டிருக்கும் காரியம் கண்ணில் பட உடனே அவளை உதறினான். பின் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
பின்பு அவளிடம், “அனந்திதா, இதுதான் என்னோட பிரச்சனையே உன்கிட்ட என்னால நார்மலா இருக்க முடியல. நீ என்பக்கத்துல இருந்தாவே, இப்படித்தான் எனக்கு தோணுது. சோ ப்ளீஸ், கொஞ்ச நாளைக்கு நாம ப்ரோபஷனலா மட்டும் பேசலாம். மத்தபடி என்கிட்ட நீ வராதே?... நாம கொஞ்சநாள் யோசிக்க டைம் எடுத்துக்கலாம்” என்றான்.
அவன் அவ்வாறு கூறியதும் அவளுக்கு ஒரு மாதிரியானது இவளோ நேரம் இருந்த நெருக்கம் என்ன? இப்போது பேசாதே என்கிறானே என்று குழம்பினாள்.
அவள் குழம்பி இருந்த நிலை அறிந்தும் அவள் அருகே வராமல், “வா !! ரூமுக்கு கிளம்பலாம்.. ரொம்ப நேரம் ஆயிடுச்சு..” என்றுக் கூறியவன் அவளை அழைத்துக்கொண்டு சென்றவன் அவள் அறையில் அவளை விட்டுவிட்டு தன்னறைக்கு சென்றான்.
மனதில் நினைத்தான், “எனக்கு தெரியும் நான் உன்னை விரும்புகிறேன் என்று. உனக்கு கூட என்னபத்தி அப்படிதான் நினைக்கிற, ஆனால் நீ எப்போ தெளிவாகறயோ அப்போ என் மனசுல இருக்கறதா சொல்றேன் அனந்திதா....” என்று கூறிக் கொண்டான்.
பின் அவளோடு தான் கழித்த இனிமையான நினைவுகளோடு உறங்கிபோனான் அவள் தூக்கத்தையும் எடுத்துக்கொண்டு. அனந்திதா, அதிர்ச்சியில் சிலையாகி போனாள். அவள் குழம்பும் மனதோடு படுத்தவள். உறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்க, அசதியில் அவளை மறந்து உறங்கினாள்.
இதுவே இவர்களின் வாடிக்கையானது அடுத்த இரண்டு வாரங்களும். வேலை சமயத்தில் இருக்கும் நெருக்கத்தை இருவருமே விரும்பினர். ஆனால் பர்சனல் லைப்பில் எல்லாம் தலைகீழாக இருந்தது.
இந்த நிலையை மாற்ற போகிறவள் ப்ரீத்தியே !!.....
தொடரும்...
{kunena_discuss:1192}