அப்படியே எல்லோரும் பேசிக் கொண்டே இருக்க இரவு உணவு நேரம் ஆக, ராம் , மைதிலி எல்லோரும் வந்து விட வழக்கம் போல் அரட்டையுடன் இரவு உணவு நடந்தது. அதற்குப் பின் மற்ற சிறியவர்களை அழைத்துக் கொண்டு மைதிலி கிளம்பிவிட்டாள்.
ஏற்கனவே ராம் சொல்லியிருந்தபடியால், பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் மித்ராவை அவள் ரூமிற்கு அனுப்ப, அங்கே ஷ்யாம் காத்து இருந்தான்.
மித்ரா உள்ளே தயங்கி தயங்கி வர, ஷ்யாம் அவள் அருகில் வந்து
“மித்ரா, உன் ரூமில் என்னோடு இருப்பது உனக்கு கஷ்டமாக இருக்கா? “ என்று கேட்டான்.
“அது எல்லாம் இல்லை அத்தான்” என்று அவனைப் பார்த்து பதில் சொன்னாள்.
“தேங்க்ஸ் டா. எனக்கு டிரஸ் சேன்ஜ் பண்ணனும். என்னோட பிரீப் எங்கே?” என்று கேட்டான். அவள் எடுத்துக் கொடுக்கவும் , அவள் அறையோடு இருந்த டிரெஸ்ஸிங் ரூம் சென்று மாற்றி விட்டு வந்தான்.
“நீயும் போய் டிரஸ் மாத்து “ என , அவளோ சற்றுத் தயங்கி
“எனக்கு நைட் டிரஸ் தான் கம்போர்ட்டா இருக்கும். அதை மாதிக்கவா?” என்று கேட்டாள்.
அதன் உள் நிலைமை தெரியாமல் “ஹேய் இதில் என்ன இருக்கு? உனக்கு எது வசதியோ அதைப் போட்டுக் கொள் “ என்று விட்டான்.
அவள் டிரஸ் மாற்றி வரவும் திரும்பி பார்த்த ஷாம் “ஆஹா. தெரியாம மாட்டிகிட்டியே ஷ்யாமா. சாரிலே தான் சும்மா நச்சுன்னு இருக்கானு பார்த்தா, இந்த டிரஸ்லே இன்னும் செமையா இருக்காளே. உன் மன உறுதிக்கு இப்படி எல்லாம் சோதனை வரணுமா” என்று மைன்ட் வாய்ஸ்சில் பேசினான்.
இப்போ பேசணும்னு நினைச்சதை தன்னால் பேசமுடியாது என்று உணர்ந்து ஒரு பெருமூச்சு விட்டுத் தன்னை நிதானப் படுத்தியவன்,
“மிது, ரொம்ப அசதியா இருக்கு. உனக்கும் அப்படித்தான்னு நினைக்கிறேன். சோ படுத்துக்கோ. மிச்ச எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்” என, சரி என்று படுத்தாள்.
இரண்டு நாட்களாக தூக்கமின்றி தவித்தவர்களுக்கு, உரிய இடம் வந்து சேர்ந்த நிம்மதியோ என்னவோ இருவருமே நன்றாக உறங்கினார்கள்.
தொடரும்
{kunena_discuss:1187}