பிடிக்குறதெல்லாம் கத்துப்பேன்.அதைப் பத்தி படிச்சு தெரிஞ்சுக்குவேன்.வேலைக்கு போனப்பறம் நா முதல்ல வாங்கினதே லேப்டாப் தான்.நிறைய நிறைய ப்ரௌஸ் பண்ணுவேன்.அப்போ தான் உலகத்துல தெரிஞ்சுக்க இத்தனை விஷயம் இருக்கானு நினைச்சேன்.அதுக்கு அப்பறம் ஸ்மார்ட் போன் வந்தப்பறம் இன்னும் மோசம்..”என்று சிரித்தவளை விசித்தரமாய் பார்த்தான் அபினவ்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“நீ பேஸ்புக்ல இல்லனு சொன்னப்போவே இதெல்லாம் நா யோசிச்சுருக்கணுமோ..பட் நிஜமா நீ ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜ் திஷா பேபி..காட் இஸ் க்ரேட் நல்ல வேளையா என் கையில உன்னை பத்திரமா கொடுத்துட்டாரு..”என்று கூற மென்னகையை பதிலிளித்தவள் சற்று இடைவெளிவிட்டு,
“உங்களால மட்டும் தான் என்னை இத்தனை சந்தோஷமா பாத்துக்க முடியும்னு அவருக்கே தெரிஞ்சுருக்கு அதனால தான்..”,என்றாள் மெதுவாய்.
அன்றைய நாளின் நிகழ்வுகளை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டவர்கள் நேரம் போவதறியாமல் பேசிக் கொண்டிருக்க நடுநிசியை கடந்த பின்பே உறங்கச் சென்றனர்.
தொடரும்...
{kunena_discuss:1198}