“வாம்மா. நல்லாருக்கியா?”
“இருக்கேன் அங்கிள்.”
அவர் அவள் வந்த கால் டாக்சிக்கான கட்டணத்தைக் கொடுத்துவிட்டு அவளை உள்ளே அழைத்து வந்தார்.
சுந்தரி உடனே சமையல் அறைக்குச் சென்று அவள் பருகுவதற்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள்.
“அருண் இல்லையா அங்கிள்?”
“இப்ப இல்லைம்மா. வேலை விசயமா வெளியூர் போயிருக்கான்.”
சிறிது நேரம் வேறு விசயம் பேசிக்கொண்டிருந்தனர்.,
“என்னம்மா? நீ வெளியுலகம் தெரிஞ்சுக்கனும்னுதான் நான் உன்னை அனுப்பி வச்சேன். நீ படிப்பை முடிச்சுட்டு வருவேன்னு பார்த்தா அங்கேயே தங்கிட்டே?”
அவள் சற்று நேரம் அமைதியாய் இருந்தாள்.
“எனக்குப் புரியுதும்மா. உன்னோட நண்பன் இறந்தது தாங்க முடியாத வேதனைதான்மா. ஆனால் எந்த உரிமையும் இல்லாம எத்தனை நாட்கள் நீ இன்னொரு வீட
...
This story is now available on Chillzee KiMo.
...
ி அவங்களுக்கு ஒரு நல்லதைப் பண்ணி வைப்போம்.”
அவருக்கும் சுந்தரி சொன்னது சரியாகப்பட்டது.
அன்றைய இரவு அங்கே தங்கியிருந்த கிருஷ்ணவேணிக்கு உறக்கமே வரவில்லை. அவளுக்கு நினைவெல்லாம் மகேந்திரன் மீதே இருந்தது.
அவன் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான்?
சாப்பிட்டிருப்பானா?