அவளுக்குச் சாருமதியின் மீது நம்பிக்கை இருந்தது. முக்கியமான விசயம் என்பதால்தான் அவள் அத்தனை பதட்டத்துடன் பேசினாள்.
அவள் அந்த விக்டரின் அழைப்பிற்காக காத்திருக்க அவளை நீண்ட நேரம் காத்திருக்க விடாமல் அழைப்பு வந்தது.
அந்த விக்டரும் அவசரமான குரலில் பேசிவிட்டு வைத்துவிட்டான்.
அவள் திகைத்துவிட்டாள். காரை உடனே எடுத்தவள் வேகத்தைக் கூட்டினாள்.
அவள் மனம் முழுவதும் எதுவும் தவறு நடந்துவிடக்கூடாது என்று பிரார்த்தனை செய்தது.
மகேந்திரன் சோர்வுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.
இந்தச் சோர்வு நான்கு நாட்களாய் தொடர்கிறது.
“அத்தான்.”
சாருலதா கூப்பிட்டாள்.
அவன் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான்.
“இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தாள்.
காரிலிருந்து கிருஷ்ணவேணி இறங்கி வரவும் அவள் முகம் வெளுத்தது.
‘இவள் எங்கே வந்தாள்? இவள் தொலைந்துவிட்டாள் என்று நினைத்தேனே?’
“சாரு. மகேந்திரன் சாருக்கு என்னாச்சு?”
பதற்றத்துடன் கேட்டவாறே கார் அருகில் வந்தாள்.
“எனக்கென்ன தெரியும்? மயக்கமாகிட்டார்.”