“ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போறீங்களா?”
“அதெல்லாம் தேவையில்லை.”
பதட்டத்துடன் சொன்னாள்.
“ஏன்?”
“இல்லை. அத்தான் ஒழுங்கா சாப்பிடலைன்னு நினைக்கிறேன். அந்த சோர்வினால்தான்.”
அவள் சொன்னதும் கிருஷ்ணவேணிக்குக் குற்ற உணர்ச்சி வந்தது. தான் சென்றதால்தானே அவனைக் கவனிக்க முடியவில்லை.
“சரி. நான் அவரை அழைச்சுட்டுப்போறேன்.”
அவள் விக்டரைப் பார்த்தாள்.
“நீங்க?”
“நான் விக்டர் மேடம். சாரோட கார் டிரைவர்.”
“நான் உங்களைப் பார்த்ததேயில்லையே?”
“சார் கம்பெனி வேலையாப் போகும்போதுதான் நான் கார் ஓட்டுவேன் மேடம்.”
“சரி நீங்க சாரு மேடத்தை அவங்க வீட்டில் விட்டிருங்க. மகேந்திரன் சாரை நான் வந்த காரில் உட்கார வைங்க.”
“சரிங்க மேடம்.”
அவள் சொன்னவாற
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அப்படி செய்வதற்கு தான் அவளுக்கு என்ன கெடுதல் செய்தோம்?
மனவருத்தத்துடன் மகேந்திரனைத் தாங்கியவாறே நடந்தாள்.
அவனைத் தாங்கிச் செல்வது அந்த மெல்லியளாளுக்கு வெகு சிரமமாய் இருந்தது. அவன் ஒருபக்கமாய் அவளை இழுக்க வேறு செய்தான். சிரமப்பட்டுத்தான் வீட்டின் உள்ளே அழைத்துச்சென்றாள்.