அன்று கழுகுக்கு மூக்கு வேர்த்ததுபோல் எங்கிருந்து வந்து சேர்ந்தாள்.
அந்த யுகேந்திரன் இறந்த பிறகு அவனது மரணத்திற்கு அவள்தான் காரணம் என்று சொல்லி அவளைக் கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு வெளியேற்றியிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் விட்டதுதான் என்னுடைய முழுத்தவறு.
அவன் திருமணச் செய்தி சொன்ன போது சாருலதாவின் பெற்றோர் முகத்திலும் ஈயாடவில்லை.
அதை அவன் தவறாக எண்ணிக் கொண்டான்.
முன்பே சொல்லாமல் இப்போது வந்து சொல்கிறானே? என்று கோபப்படுவதாக எண்ணிக் கொண்டான்.
அவர்களை சமாதானப்படுத்திவிட்டுக் கிளம்பினான்.
“இப்ப என்னாச்சுன்னு இப்படி கவலையா உட்கார்ந்து இருக்கீங்க? என்ன கல்யாணம்தானே ஆகப்போகுது? அந்த கிருஷ்ணவேணி எத்தனை நாள் இங்கே இருக்கப் போகிறாள்? அவளை எப்படியாவது விரட்ட வேண்டும். இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசி அதை தன் பேரில் எழுதி வைக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக சொல்லு. என்று அவள்தான் சொல்லியிருந்தாள்.
“அந்த அளவிற்குப் போக வேண்டுமா அக்கா?”
என்று கிருஷ்ணவேணி கேட்டிருந்தாள்.
மறுபக்கம் சற்றுநேரம் அமைதியாக இருந்த சாருமதி ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறு பேச்சைத் தொடர்ந்தாள்.