அதனால் சாருமதியைப் பெரும்பாலும் பார்த்துக்கொண்டது அவளது தந்தையின் தாய்தான்.
அதனாலேயே அவர்கள் குணம் அவளுக்கு வாய்க்காமல் போய்விட்டது.
அவர்களிடம் மட்டும் வளர்ந்திருந்தால் தான் இந்நேரத்துக்கு எந்தக் குடும்பத்தைக் கலைக்க திட்டம் போட்டுக்கொண்டு இருந்திருப்போமோ? என்று நினைக்கும்போதே மனம் பதறியது.
அவள் எதைப் பெருமையாக நினைக்கிறாளோ, அதை அவளது பெற்றோரும், தங்கையும் குறைவாக சொல்வார்கள்.
“அப்ப ஏதோ எனக்கு போதாத வேளை, நான் அவளை என் மாமியாக் கிழவிக்கிட்ட கொடுத்துட்டேன். அது அவளை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வச்சிருக்கு.”
தனது தாயைத்தான் அவள் பேசுகிறாள் என்று தெரிந்தும் கோபம் கொள்ளாமல் இளித்த வண்ணம் உட்கார்ந்திருக்கும் தனது தந்தையைப் பார்க்கும் போது சாருமதிக்குக் கோபம் வரும்.
நல்ல வே
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பட்டான்.
தனக்கு அவள் மீது கோபம் வரவில்லையே. ஏன்? தன்னையே கேட்டுக்கொண்டான்.
அவள் மீதான அவனது காதல் அப்படியே இருக்கிறது. அந்தக் காதலுக்கு அவள் தகுதியானவள் இல்லை என்றாலும் அவன் தன் காதலை மாற்றிக்கொள்ளவில்லை. அவளைப் பற்றித் தெரியாமலே அந்தத் தவறான எண்ணத்தை வலுப்படுத்திக்கொண்டான்.