திரும்பி அவளைப் பார்த்தான்.
அவள் சீரான மூச்சுடன் நன்றாக உறங்கியிருந்தாள்.
அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அவளால் எப்படி நிம்மதியாக தூங்க முடிகிறது?
அவனுக்கு அவளை முதன் முதலில் பார்த்த போது இருந்த அவளது முகம் கண் முன் வந்தது.
அப்போது எந்தக் கள்ளங்கபடமும் இல்லாமல் சிரிக்கும் ரோஜாமலராய் பளீரென்ற தோற்றத்துடன் இருந்தது கண் முன்னே வந்தது.
யுகேந்திரன் இருந்த வரைக்கும் கூட அவளது அந்தச் சிரிப்பு அவளிடம் இருந்தது. அவனை நேரில் பார்க்கும் போது அத்தகைய சிரிப்பு துணி கொண்டு துடைத்தாற் போன்று அவள் முகத்தில் இருந்து அகன்றுவிடும். அவன் இல்லை என்ற எண்ணத்தில் அவள் அந்த பூப்போன்ற அந்தச் சிரிப்பை உதிர்க்கும்போது அவன் மறைவாக இருந்து கவனித்திருக்கிறான்.
இப்போது அந்தச் சிரிப்பு அவளிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
டு செய்திருக்கிறாளா?
அவனுக்குக் கோபம் வந்தது.
ஆனாலும் இந்த நிலைமையிலும் அவளைத் தனக்குப் பிடித்துத் தொலைக்கிறதே? என்று தன்னையே நொந்துகொண்டான்.
அந்த விக்டர்தான் இந்த திருமணத்திற்கும் ஒரு வகையில் காரணம் என்பதால்தான் அவனை வேலையைவிட்டு அனுப்பவில்லை என்று அவனுக்கே தெரிந்தது.