“அபிப்பா ஒண்ணுமில்ல இப்படியெல்லாம் இருக்கும்னு நான் கேள்வி பட்டுருக்கேன் தான்.இருந்தாலும் அடிவயித்தை பிரட்டி வாந்தி வரும்போது அழுகையும் வந்துருச்சு..மத்தபடி ஒண்ணுமில்ல..இதுக்கே இப்படி முகம் சுருங்கிப் போனா இன்னும் ஒன்பது மாசம் எத்தனையோ இருக்கு”,என்றவள் அந்த சோர்வையும் மீறி அழகாய் சிரித்தாள்.
“என்னவோ போ திஷாம்மா..எது எப்படியோ நா முடிவு பண்ணிட்டேன் ஒரே குழந்தை தான் இன்னோன்னு எல்லாம் வேலைக்கே ஆகாது..ம்ம் சொல்ல மறந்துட்டேன் அப்பறமா ஸ்கூல்க்கு கால் பண்ணி வேலையை ரிசைன் பண்றத பத்தி பேசிடு டெலிவரிக்கு அப்பறம் பாத்துக்கலாம்..”
“ஏன்ப்பா கொஞ்ச நாள் வரை போறனே..வீட்ல சும்மா இருந்து என்ன பண்ண போறேன்..”
“சும்மா யாரு இருக்க சொன்னா ஒழுங்கா உடம்பை பாத்துக்கணும் அதுவே எவ்ளோ பெரிய வேலைனு தெரியும்தான..அதையும் தாண்டி மாமியாரும் மருமகளும் தான் கைவசம் நிறைய தொழில் வச்சுருக்கீங்களே இந்த பழைய படத்துல எல்லாம் வர்ற மாதிரி பாப்பாக்கு ஸ்வெட்டர் ரெடி பண்ணு..”,என்றவனை முறைக்க நினைத்து சிரித்திருந்தாள்.
அவளை சாப்பிட வைத்து வாய் துடைத்து கட்டிலை விட்டு இறங்க விடாமல் அவனே தட்டை எடுத்துச் சென்றான்.
திஷானிக்கோ தான் செய்ய நினைந்திருந்த தவறு இப்போது தெளிவாய் புரிந்தது.எத்தனை பாசமும் அன்புமாய் இருப்பவனிடம் கூட சொல்லாமல் என் பிள்ளையை என்ன செய்ய பாத்தேன்..கடவுளே!!!என்றவள் சட்டென தன் வயிற்றைப் பற்றிக் கொண்டள்.
இப்படியாய் ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் முதல் ஸ்கேனுக்காக அவளை வர சொல்லிருக்க அபினவோடு கிளம்பிச் சென்றாள்.
காலை அப்பாயிண்மெண்ட் தான் கிடைத்திருந்ததால் கஷ்டப்பட்டு அவள் சென்றிருக்க அப்டமண் புல்லா இருந்தா தான் ஸ்கேன் ரிப்போர்ட் கரெக்டா இருக்கும் நிறைய தண்ணி சாப்ட்டு வாங்க..இதுக்கு மேல முடியாதுனு நினைக்குறப்போ சொல்லுங்க ஸ்கேன் எடுக்கலாம் என நர்ஸ் கூறிச் சென்றார்.
அபினவ் காரில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து அவளிடம் கொடுக்க சிறிது சிறிதாய் பருக ஆரம்பித்தவளுக்கு பாதி பாட்டிலுக்கு மேல் குடிக்க முடியாமல் திணறினாள்.அதையும் இதையும் கூறி அபினவ் அவளை தண்ணீரை காலி பண்ண வைத்தான்.
ஒருபுறம் தண்ணீர் குடித்தது வயிற்றைப் பிரட்ட மறுபுறம் இயற்கை உபாதை படுத்தியது.அவள் நேரத்துக்கு அப்பாயிண்ட்மெண்ட் போட்டிருந்த இருவர் வந்திருக்க காத்திருக்க வேண்டியதாய் போனது.
அவள் நிலையுணர்ந்தவன் அவள் கையை தன்னோடு பற்றிக் கொண்டு மெதுவாய் வருடியவாறே அழுத்தி அவளின் நிலையை சாதாரணமாக்க முயற்சித்தான்.ஒரு வழியாய் அவர்களின் முறை வர திஷானியை உள்ளே அழைத்துச் சென்றனர்.
பத்து பதினைந்து நிமிடம் கழித்து வெளி வந்தவள்,”அபிப்பா ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன் முடில..அவங்க ரிப்போர்ட் தரேன்னு சொன்னாங்க நீங்க வாங்கிட்டு டாக்டர் ரூம்க்கு போங்க நா வரேன்..”,என்றவள் பதிலுக்கு காத்திராமல் சென்றாள்.
அவள் கூறியபடி ரிப்போர்ட்டை அவனிடம் கொடுக்க அவள் வரும்வரை காத்திருக்க முடிவு செய்தவன் ரிப்போர்ட்டை பார்வையிட பார்த்தவனின் கண்கள் ஓர் இடத்தில் அவனறியாமல் நிலைகொண்டது.
திஷானி அவனருகில் வந்ததை கூட உணரமால் அவன் அதை பார்த்திருக்க மெதுவாய் அருகில் அமர்ந்தவள் அவன் தோள்பற்றி,”என்னங்க எதுவும் ப்ரச்சனை இருக்கா..பாப்பாக்கு எதுவும் ப்ராப்ளமா?”,என பதட்டமாய் அவள் கேட்டாள்.
சட்டென உணர்வு பெற்றவன்,”அடச்சே லூசு நா இன்னும் டாக்டரையே பார்க்கல..வேற ஒண்ணு பத்துட்டு இருந்தேன்.இருந்தாலும் கன்பார்மா தெரில டாக்டரையே கேட்போம் வா..”,என்று அழைத்துச் சென்றான்.
ரிப்போர்ட்டை கையில் வாங்கிய மருத்துவரை ஒரு வித ஆர்வத்தோடு அபினவ் பார்க்க பயத்தோடு பதட்டமாய் திஷானி பார்த்தாள்.
“வெல் கங்க்ராட்ஸ் மிஸ்டர் அண்ட் மிஸஸ் அபினவ்..உங்களோட டூவின் பேபிஸ் அவங்க நாட்களுக்கான வளர்ச்சியோட நல்லாயிருக்காங்க..”,என்றவர் சிரிக்க திஷானி அபினவின் கையை இறுகப் பற்றிக் கொண்டள்.
அவள் கரத்தை அழுந்தப் பற்றியவன் அவள் மனவோட்டத்தை கணித்தவாறு டாக்டரிடம்,”தேங்க் யூ டாக்டர்.அண்ட் திஷாவோட ஹெல்த் ஓ.கே தான?ட்வின் பேபிஸ் அவளால??”
“ஷி இஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட் அபினவ்..இப்போ மார்னிங் சிக்னஸ்னால டயர்டா இருக்காங்க மந்தஸ் ஆக ஆக அதெல்லாம் சரியாயாய்டும்.மத்தபடி கவலை படுறதுக்கு ஒண்ணுமில்ல.அண்ட் இன்னொரு விஷயம் நார்மல் டெலிவரிக்கு பாசிப்லிட்டீஸ் கண்டிப்பா கம்மி தான்.பிகாஸ் அவங்க இடுப்பு எலும்பு எந்தளவு உறுதியா இருக்கும்னு சொல்ல முடியாது..அதனால நோ வொரீஸ்..”
“டாக்டர் சிசிசேரியனா??”,என தயக்கமாய் அவரையும் திஷானியையும் அவன் பார்க்க லேசாய் முறுவலித்தவர்,