(Reading time: 19 - 38 minutes)

“அய்யே தெரியாம சொல்லிட்டேன் ஆளை விடுங்க”,என்றவள் சலுகையாய் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

நாட்கள் மாதங்களாய் நகர எட்டாவது மாதம் மேடிட்ட பெரிய வயிறோடு சோர்வாய் அமர்ந்திருந்தாள் திஷானி.அவளுக்காக பால் எடுத்து வந்தவன் அவள் கைகளில் டம்ளரை கொடுத்துவிட்டு கால்களை நீவி விட்டு இதமாய் பிடித்து விட ஆரம்பித்தான்.

“சீக்கிரமா படுத்துக்கோ திஷா பேபி நாளைக்கு பங்கஷனுக்கு காலையிலேயே ஒரு வழி ஆக்கிடுவாங்க..ஒழுங்கா தூங்கு..”எனும் போதே அவள் வயிற்றை சுட்டிக் காட்டிச் சிரித்தாள் திஷானி.

“சரியான அப்பா புள்ளைங்க ரெண்டும் எப்படி உங்க குரல் கேட்டவுடனே ஆட்டம் போடுறாங்க பாருங்க… அபிப்பா இப்போவே சொல்லிட்டேன் நாளைக்கு உங்க புள்ளைங்க கூட சேர்ந்துட்டு என்னை தனியா விட்டீங்கனா அப்பறம் இருக்கு..”

அவள் பேச ஆரம்பித்த போதே கையை வயிற்றில் வைத்து தடவிக் கொடுத்தவன் புன்னகையோடே பார்த்திருந்தான் தன்னவளை..

“ஏண்டி நாள் புல்லா என்னை பத்தி மட்டுமே குழந்தைங்க கிட்ட பேசிட்டு இப்போ என்னை குறை சொல்றியா..”,எனச் செல்லமாய் காலை அழுத்தினான்.

அசடு வழிய சிரித்தவள்,”ம்ம் அவங்க இப்போவே அப்பாவ பத்தி தெரிஞ்சுக்கணும்.ஒருத்தரை உயிருக்கு உயிரா எப்படி காதலிக்கணும்னு தெரிஞ்சுக்கணும்.ஒரு நல்ல மகனா மகளா கணவனா அப்பாவா எப்படி இருக்கணும்னு சொல்லி கொடுத்து வளர்க்கணும் தான..”

“சரிதான் வயித்துக்குள்ள இருக்குற குழந்தைக்கு சொல்ல வேண்டிய ரொம்ப முக்கியமான கதை தான்.ஒழுங்கா தூங்கு டீ..”

இடதுபுறமாய் திரும்பிப் படுத்தவள் அவனையே பார்த்திருக்க தலையில் அடித்துக் கொண்டவன் அமைதியாய் அவளருகில் படுத்துக் கொள்ள நிதானமாய் கண் மூடினாள்.

மறுநாள் காலை பரபரப்பாய் தொடங்க திஷானியை தவிர வீடே சக்கரம் கட்டி பறந்து கொண்டிருந்தது.

அபினவோ ஹாலுக்கும் ரூம்க்குமாய் அலைந்து கொண்டிருந்தான்.

“ஏய் கருப்பழகி என்ன ஒரே நாள்ல என் கலருக்கு வரலாம்னு முடிவு பண்ணிருக்கியா?எவ்ளோ நேரம் டீ குளிக்குற..சளி பிடிச்சுக்க போகுது வெளியே வா..”,என கதவை உடைக்காத குறையாய் கத்திக் கொண்டிருந்தான்.

“ஏன்ங்க என் மானத்த வாங்குறீங்க சொந்தகாரங்க காதுல விழுந்தா என்ன ஆகும்.அப்பறம் என்ன சொன்னீங்க உங்க கலரா இதெல்லாம் ஒரு கலரா மைதா மாவு மாதிரி..கருப்புதான் நம்ம ஊரு கலர்..தெரிஞ்சுக்கோங்க..”

“ரொம்ப தேவைதான் இந்த விளக்கம்..வாடி வந்து புடவையை கட்டு சீக்கிரமா..”,என்றவன் தயாராகச் செல்ல மேல் மடிப்பு வைத்து முடித்தவளுக்கு கீழ் மடிப்புகளை  சரி செய்து விட்டான்.தலையை உலர துவட்டி விட்டு அவள் பின் நின்று தன் தலை வார ஆரம்பிக்க அவளோ அப்படியே அமர்ந்து அவனை கண்கொட்டாமல் பார்த்திருந்தாள்.

“ஏன் டீ பொண்டாட்டி அப்படி பாக்குற சின்ன பையன் பாவம்..”

அழகாய் சிரித்தவள் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய் நின்றவனிடமிருந்து விழியகற்றாமலே இருக்க அவள் முன் மண்டியிட்டு அமர்ந்ததவன் என்னவென்பதாய் புருவம் உயர்த்தினான்.

இடவலமாய் தலையசைத்தவள் அவன் முகத்தை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டாள்.

“அபிப்பா நம்ம பசங்க ரெண்டு பேரும் உங்க ஜாடையிலேயே பிறக்கணும்..”

“அப்போ நீ மட்டும் ஆட் மேன் அவுட்டா இருப்பியே பரவால்லையா பேபி..”,என்றவன் சிரிக்க கன்னத்தை இறுகப் பற்றி கிள்ளினாள்.

“ஸ்ஸ் ஆஆ வலிக்குது டீ..உண்மையை தான சொல்றேன்.பையனா பிறந்தா உன்னை மாதிரி இருக்கட்டும் பொண்ணு கிடைக்குறதுல பிரச்சனை இருக்காது.பொண்ணா பிறந்தா என்ன மாதிரி இருக்கட்டும் இல்லனா மாப்ள வீட்டுக்கு டௌரி குடுத்து முடியாது டா பேபி..உன் புருஷன் பாவம்.”

“ஐயேயே என்ன ஒரு சிந்தனை அடச்சே..என் பொண்ணுக்கும் எனக்கு கிடைச்ச மாதிரி ஒரு எடக்கு நாட்டான் கிடைக்காமயா போய்டுவான்..”

“அடிப்பாவி..உன்னை..இரு பங்ஷன் முடியட்டும் உன்னை ஒரு வழி ஆக்குறேன்..என்றவன் நெற்றியில் இதழ்பதித்து எழுந்தான்.

அவள் தயார் ஆனதும் அழைத்துக் கொண்டு ஹாலிற்குச் செல்ல அவர்களை பார்த்த  பெற்றவர்களுக்கு மனம்நிறைந்து போனது.வளைகாப்பு நல்ல முறையில் ஆரம்பிக்க அனைவருமாய் வளையலிட்டு நலுங்கு வைத்து திஷானியை ஆசீர்வதித்தனர்.

தாய்மை கொண்ட பெண்ணின் அழகே அழகு தான் நிச்சயமாய்.பட்டுப்புடவை சரசரக்க கன்னம் முழுவதும் சந்தன மணம் கமழ ஒப்பினையில்லாத முகம் மனதின் பூரிப்பை கொண்டே தங்கமாய் தகதகக்க பூக்களின் மனம் நாசியை வருடவென திஷானி பேரழகியாகவே தெரிந்தாள் அவளின் அபினவிற்கு.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சீரும் சிறப்புமாய் அழகாய் விழா முடிய திஷானி மொத்தமாய் சோர்ந்து போயிருந்தாள்.அபினவ் அவளை அறைக்கு அனுப்பிவிட்டு தட்டில் அவளுக்கான உணவை எடுத்துச் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.