அவளிடம் உணவை கொடுத்துவிட்டு வந்தவர்களை கவனிக்கச் செல்ல அவள் பொறுமையாய் உண்ண ஆரம்பித்தாள்.வயிறு பசியாய் வெறுமையாய் இருப்பதை போன்ற உணர்வு இருந்தும் ஏனோ சாப்பிட தோன்றாமல் மெதுவாய் ஒவ்வொரு வாயாய் விழுங்கினாள்.
தட்டை வாங்குவதற்காக அபினவ் வர பாதி சாப்பாடு அப்படியே இருப்பதை கண்டவன்,
“திஷா பேபி வம்பு பண்ணாம ஒழுங்கா சாப்டு சாப்பாடு அப்படியே இருக்கே ஏன்??”
“இல்லங்க முடில என்னவோ போல இருக்கு நா கொஞ்சநேரம் படுத்துக்குறேன்..ப்ளீஸ்..”
அதற்கு மேல் வற்புறுத்த தோன்றாமல் புடவையை மாற்ற உதவியன் அவளை படுக்க வைத்துச் சென்றான்.
மதியதிற்கு மேல் வந்தவர்கள் அனைவரும் கிளம்ப திஷானியின் தாயும் தம்பியும் மட்டுமே இருந்தனர்.
அனைத்தையும் செட்ல் செய்துவிட்டு அபினவ் தனதறைக்கு வர திஷானி பல்லை கடித்தவாறே கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
“திஷாம்மா!!!”
“வலிக்குதுங்க..”
“”போன வாரம் தானடா டாக்டர் பாத்தோம் இன்னும் டைம் இருக்கு சொன்னாங்களே..பால்ஸ் பெயினா இருக்குமா!!”
“இல்லப்பா அப்படி தெரில..ரொம்ப ஒரு மாதிரி இருக்கு”,என்றவளுக்கு கண்ணில் நீர் கோர்த்திருந்தது.
அதற்கு மேல் அபினவ் எதையும் யோசிப்பதாய் இல்லை வேகமாய் பெரியவர்களுக்கு விஷயத்தை கூறி காரை எடுக்க விரைந்தான்.திஷானியை மெதுவாய் அழைத்து மற்றவர்கள் காரில் அமர்த்த பெண்கள் இருவரும் அவளோடு செல்ல ராகவன் டூவிலரில் திஷானியின் தம்பியை அழைத்துச் சென்றார்.
அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப்பெறும்
{kunena_discuss:1198}