“மிஸ்டர் அபினவ் எந்த காலத்துல இருக்கீங்க..சீசெக் எல்லாம் இந்த காலத்துல ஒரு விஷயமே கிடையாது.நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு இருக்குறவங்க கூட வலி பொறுக்க முடியுமா சிசேரியன் பண்ணிக்க தான் அடம் பிடிப்பாங்க..சோ பயபடாம பேரண்ட் ஹுட்டை என்ஜாய் பண்ணுங்க ரெண்டு பேரும்..
அடுத்த செக்அப் வர்ற வர போட வேண்டிய டேப்லெட்ஸ் எல்லாம் எழுதி தரேன்..விடாம போட்டுக்கனும் திஷானி..டயட் நார்மலா உங்களுக்கு பிடிச்சதெல்லாம் சாப்டுங்க..ஒரு மூணு மாசம் முடியுற வரை நல்லாவே ரெஸ்ட் எடுங்க..ரெண்டு குட்டீஸ் இல்லையா ரொம்பவே கவனமா இருக்கணும் சரியா?”,என தன் கடமையாய் அனைத்தையும் கூறி அனுப்பினார்.
திஷானிக்கு இன்னுமுமே நடப்பதை நம்ப முடியாமல் வயிற்றில் லேசாய் கை வைத்தவாறே வெளியே நடக்க அபினவோ இன்னதென சொல்ல முடியாத ஒரு நினைவில் இருந்தான்.காரினுள் நுழைந்த அடுத்த நொடி அவளை இறுக அணைத்துக் கொண்டான்.அப்போதுதான் தன் சிந்தனையிலிருந்து வெளியே வந்தவள் வாய் திறக்க எத்தனிப்பதற்குள் அவள் கழுத்து வளைவை நனைத்திருந்தது அவளவனின் கண்ணீர்..
“என்னங்க என்னாச்சு என்ன இது சின்னபுள்ளை மாதிரி..இங்க பாருங்க.. நல்லாயிருக்கேன்னுதான டாக்டர் சொன்னாங்க அப்பறம் ஏன் இப்படி பண்றீங்க..அபிப்பா..”
மெதுவாய் அவளைவிட்டு பிரிந்தவன் முகத்தை சீர்படுத்திக் கொள்ள அவனுக்கு தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.
“திஷா பேபி சத்தியமா நா எப்படி பீல் பண்றேன்னு எனக்கு தெரில..ஒருபக்கம் சந்தோஷமா இருக்கு இன்னொருபக்கம் சிசேரியன் அது இதுனு எனக்கு பயமா இருக்கு பேபி..”
“இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா தெரில..ஒண்ணு இல்ல ரெண்டு புள்ளைக்கு அப்பா ஆகப் போறீங்க..இப்படியா பயப்படுவீங்க..இதெல்லாம் புள்ளை வர்றதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும்..”,என்றவள் தன் முகச் சிவப்பை மறைக்க தலையை திருப்பிக் கொண்டாள்.
“அடிப்பாவி என்னவோ உனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லாத மாதிரி பேசுற..ஒரு சின்ன பையனை இப்படியெல்லாம் கலாய்க்குறியே”,என்றவன் சிரிக்க அவன் முகமுமே சற்று தெளிவடைந்திருப்பதாய் தோன்றியது.
வீட்டிற்கு வந்தவன் சாரதாவையும் ராகவனையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தான்.”ம்மா நீதான் அவளை ஒழுங்கா பாத்துக்கணும்.ஹெல்தியா சமைச்சு கொடுக்கணும் அப்பறம் எப்போ எப்படி நடந்துகக்கணும்னு பாத்துக்கோ..
ப்பா நீங்க அம்மாக்கு ஹெல்ப் பண்ணணும் அம்மாவ தனியா வேலை செய்ய விடாம கூடஇருந்து அவங்களை கவனிச்சுசச்சணும் புரியுதா??”
“எல்லாம் காலக் கொடுமைடா சரிதான் இன்னும் ஒரு ஒன்பது மாசம் உன் படுத்தல் கொஞ்சம் ஓவராதான் இருக்கும் போலவே பேசாம நா எதாவது ஆன்மீக டூர் போய்ட்டு வரேன்”,என்று ராகவன் சிரிக்க சாரதாவோ,
“டேய் ஓவரா பண்ணாத டா வரப்போறது உனக்கு பிள்ளைங்கனா எங்களுக்கு பேரப் பிள்ளைங்க உன்னை விட பல மடங்கு பொறுப்பு எங்களுக்குத் தான் இருக்கு தெரிஞ்சுக்கோ..அதெல்லாம் நாங்க பாத்துப்போம் நீ போய் உன் ஆபீஸ் வேலையை ஒழுங்காப் பாரு”,என்று அவன் காலை வாரினார்.
திஷானியின் தாய்க்கு விஷயத்தை கூற அவரும் தம்பியும் அவளைப் பார்க்க வந்திருந்தனர்.
“சம்மந்தி என்ன தான் இருந்தாலும் அம்மா வீடுனா தனி தானே அவளுக்கும் எங்களோடஇருக்கணும்னு ஆசை இருக்கும் இல்லையா நாள் பர்த்து அவளை ஒருபத்துநாள் அங்க அழைச்சுட்டு போய்ட்டு வரேனே..”,என அவர் சாதாரணமாய் கூற அபினவிற்கோ முகம் விளக்கெண்ணை குடித்தார் போல் ஆனது.தன்னவளை தலைத் திருப்பி பார்க்க அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வேண்டாம்னு சொல்லு என அவன் விழிகளால் பேச அவனையே பார்த்திருந்தவள்,”ம்மா இப்போதைக்கு வேண்டாம் மா அப்பறமா நா வரேன்.அங்கே வந்தா நீ தான் தனியா பாத்துக்கணும்.இங்கனா இவங்க எல்லாரும் இருக்காங்கல..”,எனக் கூறி முடிக்க அபினவோ கண்களால் அவளை விழுங்கிக் கொண்டிருந்தான்.
பெரியவர்கள் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க காதல் ஜோடிகளோ எதையும் கண்டு கொள்வதாய் இல்லை.அவர்கள் கிளம்பியவுடன் அறைக்கு வந்தவளை தன் அணைப்பில் வைத்தவன்.,
“தேங்க் யூ டீ கருப்பழகி..”
“எதுக்கு??”
“ம்ம் உனக்கு தெரியாதா??”
“ஒரு வாரம் நா போய்ட்டு தான் வரேனே..நீங்களும் ஜாலியா இருப்பீங்க தான?”
“”ஒரு வாரமா!!அவ்ளோ ஈசியா போச்சா உனக்கு..சும்மாவே உன்னை விட்டு நகர மாட்டேன் இப்போ நீங்க மூணு பேரும் என்னைவிட்டு அங்க இங்க நகரவே முடியாது தெரிஞ்சுக்கோ..”
“என்னை ஒரு வழி ஆக்காம விடமாட்டீங்கனு மட்டும் தெரியுது..ஆனா மனசு நிறைஞ்சு இருக்குங்க..எப்படி சொல்றதுனு தெரில..வயிறை தொட்டு பாக்கும் போதெல்லாம் ஒரு மாதிரி புல்லரிக்குது..”
பேசியபடியே அவன் கையை எடுத்து வயிற்றின் மேல் வைத்துக் கொண்டாள்.அவனுக்குமே அதே நிலைதான்.இரத்தமும் சதையுமாய் இரு உயிர் இந்த சிறு வயிற்றில் கடவுள் படைப்பின் அதிசயங்களில் உச்சகட்டமென தோன்றியது.