மற்ற பொருட்களை எல்லாம் அன்பு இல்லத்தவரே பயன்படுத்திக்கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டாள்.
அவளது பெற்றோர் புகைப்படத்தை அவள் கழட்ட முயல, அன்பு இல்லத்தார் வேண்டாம் என்று மறுத்துவிட்டனர்.
“அம்மா. இவங்களால்தான் இத்தனை பேருக்கு தங்க நிழல் கிடைக்குது. அதனால் அவங்க புகைப்படம் அப்படியே இருக்கட்டும்.” என்று நிர்வாகி சொல்லிவிட அதை அப்படியே விட்டுவிட்டனர்.
கதிரவன் குடும்பத்தாரிடம் விடைபெற்றுக் கிளம்பினர்.
காரை ஓட்டிக்கொண்டே இடையிடையே மகேந்திரன் தனது மனைவியை பார்த்துக்கொண்டான்.
அவள் அந்த டிரஸ்டுக்கு பெயர் தேர்ந்தெடுத்தது முதல், தன்னை வெறுத்த உறவினர்களுக்கும் பண உதவி செய்தது வரை அவளைப் பார்த்து அவனுக்குப் பிரமிப்புதான்.
தன்னுடைய பெற்றோரின் முதல் எழுத்தோடு யுகேந்திரனின் முதல் எழுத்தையும
...
This story is now available on Chillzee KiMo.
...
தே அவள் பையன் என்றுதான் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்.
ஸ்கேன் பண்ணும்போது கூட மருத்துவர் என்ன குழந்தை என்று சொல்லவில்லை. இருந்தும் அவள் ஆண் குழந்தை என்ற எண்ணத்திலேதான் பேசுவது எல்லாம்.
யுகேந்திரனே தனக்கு குழந்தையாக வந்து பிறக்கப்போகிறான் என்றுதான் அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள்.