ஆனால் அவள் பயப்படுவது போல் அவளது குடும்பமும் உள்ளே நுழையுமே.
அதன் பிறகு கிருஷ்ணவேணியை தன் அண்ணியாக தேர்ந்தெடுக்கும்போது முதலில் சாருமதியடம்தான் சொன்னான்.
அவளுக்கு மிகவும் சந்தோசம். ஒரு முறை விக்டர் நேரில் அவனைப் பார்க்க வரும்போது சாருமதியைப் பார்த்து தயங்க, யுகேந்திரன் தான் அவனை தைரியப்படுத்தினான்.
“விக்டர். நீ என்னை நம்பி என்ன சொல்வாயோ? அதை மதிக்காவிடம் சொல்லலாம்.”
அவனுக்கு அப்போதைக்கு தான் நீண்ட காலம் இருக்க மாட்டோம் என்று தெரிந்ததோ என்னவோ?
தன் அறையை விட்டு வெளியில் வந்தான் மகேந்திரன். கீழே எப்போதுமில்லாத வகையில் கலகலப்பாக இருந்தது.
கீழே சாருமதி தன் குழந்தையுடன் வந்திருந்தாள். அவளது கணவனும் வந்திருந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11873-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-23">Episode # 23
{kunena_discuss:1182}