யுகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவன் கோகுலை சந்தித்தபோது அவன் காலம் கடந்துவிட்டதாக சொன்னான். தன்னால் முடிந்த அளவில் முயற்சி செய்வதாகக் கூறினான்.
யுகேந்திரன் இறந்தே அன்றே அவனது மரணத்தில் சந்தேகம் இருந்திருந்தால் அவனது உடலை பிரேதப் பரிசோதனை செய்து பார்த்திருக்கலாம்.
இதோ இப்போது யுகாவின் விசயத்தில் ஒரு முன்னேற்றம்.
“முரளி. ஏன் இப்படி திடீர்னு தற்கொலைக்கு முயற்சி செஞ்சே? உன்னைப் பெத்தவங்களை நினைச்சுப் பார்த்தியா?”
பேச்சை ஆரம்பிக்க வேண்டுமே என்று மென்மையாகக் கேட்டான்.
அவனது பேச்சைக் கேட்ட உடனே முரளி பொங்கியழ ஆரம்பித்துவிட்டான்.
அவன் அழுது முடிக்கும் வரை பேசாமல் இருந்தனர்.
அவனிடம் இந்த மாற்றம் இப்போது மட்டுமல்ல. முன்னேயே இருந்தது.
ஒருநாள் கிருஷ்ணவேணியை
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்து…
விக்டர் என்று ஒருவன் தன் அண்ணனைப் பார்க்க வந்திருப்பதாக காவலாளி வந்து சொன்னதும் யுகேந்திரன் அவனைப் பார்ப்பதற்காகச் சென்றான்.
அண்ணன் வீட்டில் இல்லை. அதனால் தானே போய் என்னவென்று விசாரிப்போம் என்று சென்றான்.