(Reading time: 18 - 35 minutes)

அவள் நினைத்த மாதிரி நடந்துவிட்டால் நன்றாக இருக்கும். ஆனால் பெண் குழந்தை பிறந்துவிட்டால்?

சொல்லப் போனால் அவனுக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்ற ஆசை. ஆனால் கிருஷ்ணவேணி திட்டவட்டமாய் ஆண் குழந்தைதான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாளே? அது இல்லாமல் போனால் அவளால் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்றுதான் அவனுக்குப் பயமே.

அவன் அவள் வயிற்றருகே குனிந்து

“டேய் பையா. அம்மா வயித்துக்குள்ளேயே நீ பந்து உதைக்கிறாயா? அம்மாவை தொந்தரவு பண்ணாம சமர்த்தா இருக்கனும் சரியா? நீங்க வெளியே வந்த உடனே அப்பாவோட பந்து விளையாடலாம்.”

அவளுக்கு குறுகுறுத்தது.

நல்லவேளை அவளை கட்டிலில் அமரவைத்துவிட்டு தான் அவன் அவன் குழந்தையிடம் பேசியதே.

அவளது தடுமாற்றம் கண்டு அவன் மென்னகை புரிந்தான். அவளது கன்னத்தில் மெதுவாக தட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

ை முயற்சியை எடுத்திருக்க வேண்டும்.

மகேந்திரனைக் கண்டதும் முரளி எழுந்து அமர முயற்சி செய்தான்.

அவனை நேரே பார்க்க முயலவில்லை. கண்களைத் தாழ்த்தி இருந்தான்.

இன்னமும் கோகுல் எதற்காக இவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைக் காண அழைத்து வந்திருக்கிறான் என்றே புரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.