அந்த விக்டர் அங்கே பதட்டத்துடன் நின்றிருந்தான்.
யுகேந்திரன் சென்று என்னவென்று கேட்டபோது அவன் சொல்லத் தயங்கினான்.
“அட தயங்காம சொல்லு விக்டர். நீ யாரு? உனக்கு என்ன உதவி வேணும். நான் அண்ணன்கிட்ட சொல்றேன்.”
அவனுக்கு யுகேந்திரன் மீது நம்பிக்கை வந்தது.
“சார். நான் மகேந்திரன் சாரோட டிரைவர். சாருலதா மேடம் என்னிடம் ஒரு வேலை கொடுத்திருக்காங்க. அதை செய்யறேன்னு அவங்ககிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். அதை சார்கிட்ட சொல்லனும்.”
“அப்படி என்ன வேலை?”
சாருலதா வேலை கொடுத்தாள் என்று சொன்னதும் அவன் முகம் சுளித்தான்.
“சாரை உளவறிஞ்சு சொல்லனும்.”
அவள் சொன்னதை மிகைப்படுத்தாமல் எளிமையாக சொன்னான்.
“அதற்கு ஒத்துக்கிட்டு வந்து எதற்கு அண்ணன்கிட்ட சொல்லனும்?”
சற்றே கோபத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் குடும்பமே தன்னை வைத்து யுகேந்திரன் வீட்டிற்குள் நுழைந்துவிடுவர் என்று அவளுக்குப் பயம். அந்தப் பயமே அவள் தன் மனதை மாற்றிக்கொள்ள காரணமாயிருந்தது.
அவளை நினைத்து யுகேந்திரனுக்குப் பாவமாயிருந்தது.
அவளது உண்மையான அன்பு கிடைத்தால் மகேந்திரன் உண்மையிலேயே சந்தோசமாகத்தான் இருப்பான்.