தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 11 - பத்மினி
அந்த ஆளுயர கண்ணாடி முன் அமர்ந்து தன் இமைகளுக்கு மஷ்கரா போட்டு கொண்டிருந்தாள் ஷ்வேதா.. முடித்ததும் தன் கண்ணை சிமிட்டி பார்த்தாள். அதுவும் அழகாக காட்டியது.. பின் விலை உயர்ந்த அந்த உதட்டு சாயத்தை எடுத்து தடவினாள்.. பின் தன் மேக்கப் முடிந்த திருப்தியுடன் எழுந்து நின்றவள் தன் உடலை இப்படியும் அப்படியும் வளைத்து பார்த்து எப்படி பார்த்தாலும் அழகாக இருக்கவும் முழு திருப்தி வந்தது அவளுக்கு... அதற்குள்
“ஷ்வேதா... “என்று நூறாவது முறையாக அழைத்திருந்தார் அவளின் அம்மா
...
This story is now available on Chillzee KiMo.
...
று வயது முதலே ஆடம்பர வாழ்க்கையை விரும்புவர்.. எப்படியும் ஒரு பணக்காரனை மணக்க வேண்டும். பெரிய வீடு, சொகுசு கார், விதவிதமான ஆடை அணிகலன்கள் எல்லாம் வேண்டும்.. ஆடம்பர சுகத்தை அனுபவிக்கவேண்டும் என்பது அவரின் ஆசை.. ஆனால் அவருடைய வீட்டின் நிலைக்கு தகுந்த படி ரங்கநாதனை மணமுடிக்க வேண்டியதாகி விட்டது..