ரங்கநாதன் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்..அவரின் வருமானத்தால் விஜயாவின் ஆசையை பூர்த்தி செய்ய முடியவில்லை..திருமணத்திற்கு பிறகும் தான் நினைத்த வாழ்வை வாழ முடியவில்லை என உள்ளுக்குள் குமுறினார் விஜயா...விஜயாவின் நச்சரிப்பால்தான் ரங்கநாதன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனியாக ஒரு சிறு தொழிலை ஆரம்பித்தார்.. மோட்டார் உதிரி பாகங்கள் வாங்கி விற்பது...
அவரின் அதிர்ஷ்டம் தொழில் நல்ல படியாக இப்பதான் முன்னேற ஆரம்பித்து இருக்கிறது... ராம்குமார் ஆரம்பிக்க இருந்த ஒரு புதிய தொழிலில், தனக்கு ஒரு வாய்ப்பு வேண்டி சென்ற பொழுது தான் அவரை முதலில் பார்த்தது.. ராம்குமாரும் வளரும் சிறு தொழில்களை ஊக்குவிப்பதில் முன்னோடி.. பெரிய நிறுவனங்களுக்கு பெரிய ஆர்டர்களை கொடுத்தாலும் இந்த மாதிரி வளர துடிப்பவர்களுக்கும் கொஞ்சம் தொழில
...
This story is now available on Chillzee KiMo.
...
ரண்டு பக்கத்திலும் வித விதமான அழகு செடிகள் வரிசையாக வீற்றிருந்தன... சாலையின் ஒரு பக்கம் தோட்டத்திற்கு நடுவே விருந்தினர்களின் கார் நிறுத்த என்று ஒரு பகுதி.. மற்றொரு பக்கம் அவர்களின் சொந்த கார்கள்.. “கார் நிறுத்த மட்டுமே காலியான இடம் என்றால், அடிக்கடி இங்கு விழா நடக்குமோ?? ...”என்று யோசித்தாள்.