அப்புறம் அன்றைய விழாவுக்கான மேடையும் விருந்தினர்கள் அமருவதற்கான விலை உயர்ந்த நாற்காலிகளும் அழங்கார விலக்குகளும் கண்ணை பறித்தன..மேடையின் ஓரத்தில் மெல்லிசை கசிந்து கொண்டிருந்தது.. அந்த இரவு நேரத்தில் அந்த இடமே ரம்யமாக திருவிழா போன்று காட்சி அளித்தது...
பார்க்கிங் சிறிது தொலைவில் இருப்பதால் ரங்கநாதன் அவர்கள் இருவரையும் முதலில் இறக்கி விட்டு காரை பார்க் செய்ய சென்றார்..
அவ்வளவு பெரிய மாளிகையை பார்த்து வாயை பிளந்தனர் இருவரும்....
“வாவ்.. சூப்பரா இருக்குமா!!! சென்னையில் இப்படி ஒரு பங்களாவா?? இதுவரை இப்படி ஒரு வீட்டை இல்லை மாளிகையை பார்த்ததே இல்லை... செமையா இருக்கு”
“ஹ்ம்ம்ம் இப்ப புரியுதா.. நான் சொன்னது... நீ மட்டும் எப்படியாவது இந்த வீட்டுக்குள்ள வந்திட்ட அத்தனை சொத்தும் உனக்குதான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றிருந்த ஜானகியின் காலில் விழுந்து வணங்கினாள் ஷ்வேதா.. ஜானகிக்கு ஆச்சர்யமாகி போனது.. இந்த காலத்து பொண்ணுங்க கூட இன்னும் காலில விழறாங்களே என்று.. பின் அவளை ஆசிர்வதித்து , அவளின் தோற்றத்தை கவனித்தார்... வெள்ளை வெளேரென்று புடவை கட்டி பார்ப்பதற்கு நல்ல குடும்ப பாங்கான பொண்ணாக தெரிந்தாள் ஷ்வேதா..