பின் ஷ்வேதா குடும்பத்தின் முறை என்பதால் பரிசை கொடுக்க ஆதித்யாவை அடைந்ததும் மெல்ல புன்னகைத்தாள்... அதை கண்டதும் ஒரு நிமிடம் ஆதித்யா இமைக்க மறந்தான்.. அவளின் புன்னைகை அவன் மனதிற்குள் பதிந்தது முதல் பார்வையிலயே... பின் பரிசினை கொடுக்கும் பொழுது தெரியாமல் அவளின் விரல்கள் அவனை ஷ்பரிசித்தன.. அந்த மெல்லிய தொடுகை அவனுள்ளே பல மாற்றங்களை ஏற்படுத்தியது...இதுவரை அனுபவிக்காத புது சுகமாக இருந்தது..
அதற்குள் அவன் சுதாரித்து கொண்டு அவர்களுக்கு நன்றி சொல்லி அடுத்தவரிடம் நகர்ந்தான்..
பின் உணவு பப்பே முறையில் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.. பல வகையான உணவுகள் இருந்தன... அனைவருமே உணவு வகைகளை கண்டு வியந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.. பிறந்த நாள் விழாவிற்கே இப்படி என்றால் ஆதித்யாவின் திருமணத்திற்கு எப்படி இருக்கும் என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்ணாக இருந்தார்...
“ஹ்ம்ம்ம்ம் நீ தான் பிடிச்சா விட மாட்டியே.. சரி .. ஆதி மனசுல என்ன திட்டம் வச்சிருக்கானு பார்க்கலாம்.. ஒரு வேளை அவன் தொழிலை கொஞ்ச நாள் பார்த்துட்டு தான் கல்யாணம் னு சொல்லிட்டா அப்புறம் அவனை நீ கட்டாய படுத்த கூடாது சரியா” என்று முன்னெச்சரிக்கையாக கேட்டு கொண்டார்...