(Reading time: 13 - 26 minutes)

“அதுக்கு ஏன் கோபம் வருது அத்தான்? என்று அவள் பாவம் போல் கேட்க, அவனுக்கு அவளிடம் எப்படி சொல்ல என்று தெரியவில்லை.

இத்தனை நாள் வெறும் மாமா மகனாக இருந்த போதே இருந்த பழக்கம், இப்போது கணவனும் ஆகிவிட்ட பிறகு, தங்களுக்கு இடையே யாரும் வருவதை அவன் விரும்பவில்லை என்பதை அவளிடத்தில் என்னவென்று சொல்வான்.

அதை சொல்லாமல் மறைத்தவன் “எனக்கு ஆபீஸ் வேலை கொஞ்சம் டென்ஷன். அதான் அப்படி சட்டுன்னு பேசிட்டேன். இனிமேல் இப்படி கோபபட மாட்டேன் சரியா?

“அப்போ வேறே எப்படி கோபபடுவீங்களாம்? என்று தலை சரித்து வினவினாள் மித்ரா. அதில் அவன் மனமும் சாய்ந்தது.

“எதுக்கும் கோபபட மாட்டேன் “ என்று கூறினான்.

“இப்போ கோபப்பட்டதுக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணுமே? “என்று கூற,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“கொடும்மா தாயே.. இதருகுதானே ஆசைப் பட்டாய் ஷ்யாம்?” தன்னை தானே கேட்டுக் கொண்டான்.

அவனின் பாவனையில் சிரித்த மித்ரா

“இப்படி எல்லாம் செஞ்சா நான் தண்டனை கொடுக்காமே விடுவேன்னு நினைச்சீங்களா? என்று மேலும் சிரித்தாள்.

“தங்கள் சித்தம் என் பாக்கியம் மகாராணி” என்று ஷ்யாம் கூறினான்.

அதற்கு மேலும் சிறிது நேரம் அப்படியே பேசி விட்டு, மீண்டும் மதியம் கம்பனியில் நடந்ததை சொன்னாள் மித்ரா.

அதைக் கேட்ட ஷ்யாம், அவளுக்கு தைரியம் கொடுத்ததோடு, தன் அம்மாவின் கூடவே இருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொள் என்று கூறினான்.

அவள் சரி எனவே இருவரும் படுக்க சென்றார்கள்.

அப்போதும் நியாபகமாக வின்னியை அவள் தூக்க, மிது என்ற ஷ்யாமின் குரலில் அவனுக்கு அழகு காட்டி விட்டு வின்னியை அதன் இடத்தில் வைத்து விட்டு வந்தாள்.

அன்றைக்கு படுக்கும்போது ஷ்யாமின் எண்ணம் முழுதும் இவள் தனக்கு கொடுக்கும் இந்த முக்கியத்துவம் எப்போதும் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

வீட்டில், தொழிலில், படிப்பில் எல்லாவற்றிலும் அவன் முதல் என்பதால் எங்கேயும் அவன் முக்கியமானவன் தான். ஆனாலும் மித்ராவிற்கு தன்னிடத்தில் இருக்கும் இந்த உணர்வு மட்டுமே அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

அவளின் திருமணம் சரவணனோடு நிச்சயம் செய்த போது தோன்றிய அந்த சொல்லத் தெரியாத உணர்வு இதுதான் என்று புரிந்தது. அதை யாரும் தன்னிடம் நேரடியாக சொல்லவில்லை, தான் வரும் வரை காத்து இருக்கவில்லை என்று மனம் கொஞ்சம் வருத்தமும், ஏமாற்றமும் கொண்டு இருந்தது.

அதை எல்லாம் சட்டை செய்யாமல் விட்டான். அதனால் தான் மித்ராவிடனுனான திருமணத்திற்கு கேட்ட போது அவன் புரியாமல் நின்றது. ஆம் புரியாமல் தான் நின்றான். புரிந்த பிறகு அவன் அவளை மணக்க சம்மதம் தெரிவித்தான்.

இதை எல்லாம் யோசித்துக் கொண்டே படுத்துக் கொண்டு இருந்தவன், மென்மையாக மித்ராவின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு, அவள் அருகில் தூங்க ஆரம்பித்தான். அவனுள் சில கேள்விகள் இருந்தன. அதை எல்லாம் சீக்கிரம் சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மறுநாள் ஆபீஸ் செல்லாமல், நேராக தன் அத்தை வீட்டிற்கு சென்றான் ஷ்யாம்.

தொடரும்

Episode # 22

Episode # 24

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.