உடனே விரைந்து வந்த டாக்டர் அவரை பரிசோதித்து அவருக்கு பக்கவாதம் அட்டாக் ஆகியிருப்பதாக கூறினார்.. ரொம்ப ஷ்ட்ரெய்ன் பண்ணிகிட்டதால இது மாதிரி வந்திருக்கலாம் என்றார்... அதன் பின் அவரை எப்படி பார்த்து கொள்ளனும் என்று சொல்லி நர்ஷ் ஒருத்தரையும் ஏற்பாடு செய்தார்..
ஜானகிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.. இடிந்து போய் தன் கணவனின் அருகிலயே அமர்ந்தார்...
ஆதித்யாவுக்கோ கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது...தன் பெற்றோரை பார்க்கவேண்டும்.. அதோடு எப்படி தொழிலை சமாளிப்பது?? .. தான் இன்னும் ஒன்றுமே கற்று கொள்ளவில்லை.. அத்தனை நிறுவனங்களையும் நிர்வகிக்கும் அளவுக்கு பழக வில்லையே என்று இருந்தது..
இருந்தாலும் சமாளிக்க வேண்டும் என்று அலுவலகம் கிளம்பி சென்றான்.. ஷ்வேதா இன்னும் உறங்கி கொண்டிருந்தாள்.. அதனா
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வெளியில் கூப்பிட்டாலும் அவளுடன் செல்ல வில்லை.. அவனால் எல்லா புரோகிராமும் கேன்சல்.. அவளுக்கும் அன்று இரவு நடந்தது சரியாக நினைவு இல்லை.. ஏதொ தான் சத்தம் போட்டது ஞாபகம் இருந்தது.. ஆனால் முழுவதுமாக நினைவு இல்லை.. யாரும் தன்னை எதுவும் கேட்காததால் தப்பாக ஒன்றும் பேசவில்லை என்று திருப்தியுற்றாள்..