குடியை வெறுக்கிற மாதிரி என்ன செய்வது என்று யோசித்தவர், மடியில் குழந்தையாக உறங்கி கொண்டிருக்கும் ஆதியை வாஞ்சையாக தடவினார்...
ஆதியை பெறாதவர் என்றாலும் அவன் பிறந்த உடன் முதலில் கையில் ஏந்தியவர்.. முதல் மூன்று மாதங்கள் ஜானகி படுக்கையில் இருந்தபொழுது அவனை தாயாக பார்த்து கொண்டவர்... தான் ஒரு குழந்தையை பெறவில்லை என்றாலும் ஒரு குழந்தையை பெற்று வளர்த்த சுகத்தை தனக்கு தந்தவன் இந்த ஆதித்யா... என்று நினைத்தவர் அவன் தலையை மீண்டும் வாஞ்சையாக தடவினார்.. எப்பொழுதும் துள்ளி குதிக்கும் காளையாக, கண்ணில் சிரிப்புடன் இருந்தவன் இப்படி சுருண்டு படுத்திருப்பது அவரின் மனதை பிசைந்தது..
“எப்படியாவது உன்னை பழைய நிலைக்கு கொண்டு வருவேன் கண்ணா “ என்று உறுதி கொண்டார்..
பின் படுக்கையில் இருந்த ஒரு தலையணைய எடுத்து அதன் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அவனை சேவ் பண்ண வைத்து குளிக்க வைத்து ஒரு நல்ல ட்ரெஷ்ஷை போட வைத்தார்... பின் சாப்பாட்டை மாடிக்கே கொண்டு வந்து ஊட்டிவிட்டார்... அவன் பக்கத்திலயே இருந்து எப்பல்லாம் அவன் மனம் பழசை நினைத்து வருந்துகிறானோ,அதுவும் அந்த ஷ்வேதாவின் வார்த்தைகள் நினைவு வந்தால் துவண்டு விடுவான்.. அப்பொழுதெல்லாம்