“இந்த உலகத்தில் கிளாமர் வோர்ல்ட்ன்னு சொல்ற துறைகளில் இருப்பவர்களையே அனைவரும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கீங்க. அது ஒரு பொழுதுபோக்குத் துறை மட்டுமே. ஆனால் உலகத்தில் மனித குல மேம்பாட்டிற்கும் இந்த உலகம் இது நாள் வரை ஜீவித்து இருக்கவும் பாடுபட்டு தங்கள் வாழ்க்கையை அர்பணித்தவர்களை எத்தனை பேருக்குத் தெரியும். நடிகர் நடிகைகளுக்கு பேன்ஸ் உண்டு. அவங்க தும்மினா, இருமினா கூட அது நியூஸ் ஆகும். ஆனால் உண்மையில் பெரும் காரியங்கள் புரிவோரின் நல்ல செயல்களை கூட மக்கள் அறிவதில்லை. எங்க நியூஸ் சேனலை எத்தனை பேர் பார்க்கிறாங்க சொல்லு” பெரிய முன்னுரை வாசித்த நண்பனின் சொல்லில் இருக்கும் உண்மையை ஒத்துக் கொண்டான் சிபி.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“தேன்மொழியின் அம்மா தான் டிசைனர் கயல்” கவின் சொல்ல ஓரளவு அதை எதிர்ப்பார்த்து இருந்தான் சிபி.
“கெவின் என்ற எனக்கு கவின்ன்னு தமிழ் பெயர் சூட்டி தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுத்தியது தேன்மொழி தான்” இந்தத் தகவல் சிபிக்கு மீண்டும் ஆச்சரியம் அளித்தது. அந்த அளவு நெருக்கம் உண்டா இருவருக்கும் என்ற எண்ணம் சற்று பொறாமையை உண்டு பண்ணியது.
“தேன்மொழி யாருன்னு நீ இன்னும் கேட்கலையே” கவின் சொல்ல இனி கேட்க என்ன இருக்கிறது என்பது போல சிபியின் முகபாவனை இருக்க அவள் யார் என்று கவின் சொல்ல அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்தே விட்டிருந்தான் சிபி.
தொடரும்
Go to Senthamizh thenmozhiyaal story main page
{kunena_discuss:1218}