(Reading time: 12 - 23 minutes)

அப்பொழுதுதான் தன் மடத்தனம் புரிந்தது லாவிக்கு..

“சாரிடா.. நான் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை..”, என்றவள்..

தரண் சொல்லச் சொல்லக் கேட்காமல் அவள் செய்துகொண்டிருந்த வேலையை மற்றவர்களிடம் ஒப்படைத்தவள்.. அவனுடன் சேர்ந்துகொண்டு வேலைகள் செய்ய..

“லாவி.. நான்தான் மேனேஜ் பண்ணிக்கறேன்னு சொன்னேன்ல.. அப்புறம் என்ன..”, கடிந்துகொள்ள..

“ஹே.. எனக்கு காம்ப்பெயரிங் பண்ணனும்னு பெருசா ஆசையெல்லாம் இல்லை.. யாரும் பெருசா அதுல இன்ட்ரெஸ்ட் காட்டல.. அதான்..”, என்று அவனை சமாதானப்படுத்தியவள்..

“அடுத்து உங்கப் ப்ரோக்ராம்டா..”, என்று நினைவுபடுத்த..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பதரற்றம் பற்றிக்கொண்டது அவனுள்..

அவன் உடல்மொழி அதனை காட்டிக்கொடுக்க..

“யூ வில் டூ இட் டா..”, என்று ஊக்கப்படுத்தியவள்..

அவன் ஸ்டேஜ் ஏறியதும் அவனின் நடிப்பைக் கண்டு அசந்துதான் போனாள்..

நடை உடை பாவனை என்று எல்லாம் திரௌபதியாகவே மாறியிருந்தான் தரண்..

கோபம், அழுகை, சந்தோஷம், ஆச்சர்யம், விரக்த்தி, துக்கமென அனைத்தையும் அவள் முகம் அழகாய் பிரதிபலிக்க..

அசந்துதான் போயினர் அனைவரும்..

துச்சாதனன் திரௌபதியை துகிலுறிக்கும் காட்சியில் அனைவரையும் அவன் கலங்கவைக்கவைக்க..

உண்மையாகவே தன்னைத் துகிலுறிப்பதுபோல் இருந்தது தரணுக்கு..

தனது உடைக்குமேல்தான் அவன் சேலையை உடுத்தியிருந்தான்..

இருந்தபோதும் தான் துகிலுறியபடும் எண்ணம்..

உடலெல்லாம் அந்நிமிடம் நடுங்கத் துவங்கியது தருணுக்கு..

துச்சாதனனாக நடித்தவனுக்கு அவனது நடுக்கம் நன்கு தெரிய..

இவன் என்ன கேரக்ட்டராகவே மாறிட்டானோ என்ற எண்ணம் தோன்ற.. துச்சாதனனாகவே அவனும் மாறிப்போனான்..

மற்றவனின் நிலையறியாது..

இறுதியில் சோர்வில் துச்சாதனன் விழுவதுபோல் காட்சி வரும்..

இங்கு மேடையிலோ இருவரும் விழுந்தனர்..

துச்சாதனன் நடித்து மயங்கிக் கீழே விழுந்தான் என்றால் தரண்யன் தன் எண்ணப்போக்கில் வீரியம் தாங்காது உண்மையில் மயங்கி விழுந்திருந்தான்..

விழுமுன் தரணின் மனக்கண்ணில் கண்ட உருவம் அவனை மேலும் நிலைகுலையச் செய்ய..

மயக்க நிலைக்கு கொஞ்சம் கொஞ்ச்மாக் சென்றுகொண்டிருந்தான் அவன்..

மீண்டும் மீண்டும் அந்தக் காட்சி அவன் மனதில் ஓடத்துவங்கியது..

உடலும் தூக்கிப்போட்டது..

நடுக்கம் நடுக்கம் நடுக்கம் மட்டுமே..

அவன் கீழே விழும்போதே திரை இறக்கப்பட அவனை நெறூங்கி தரணென்று அவன் கன்னத்தை லாவண்யா தட்ட..

இவனோ சமுத்திராக்கா என்று லேசாக யாரின் காதிலும் விழாததுபோல் முணுமுணுத்துவிட்டு மயங்கிச்சரிந்தான் அவன் மடியிலேயே.

உருவெடுப்பாள்..

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.