“பொன்னோடு சீர்கொண்டு வருக
இந்த பூவுக்கு புதுசேலை புனைக
பொன்னோடு சீர்கொண்டு வருக
இந்த பூவுக்கு புதுசேலை புனைக...
இயற்கை தரும் பூப்போடு இன்னுமொரு பூ பைகை
வண்ண மலர் குலம் வாழ வாழ்க வாழ்க...”
ஒருவழியாக தேன்நிலாவின் விழா மிகச்சிறப்பாக நடந்தது...சந்தனபாண்டியன் வேல்விழிக்கு என்ன செய்திருந்தாரோ அது அனைத்தும் தேன்நிலாவிருக்கு செய்தார்...
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அவர் தனது தங்கை அன்னதிற்காக மட்டுமே அதை எல்லாம் செய்தார்...
தனது தங்கையின் முகத்தில் அந்த விழாவின் மூலம் அப்படி ஓர் சந்தோசத்தை கண்டார் சந்தனபாண்டியன்.
அங்கு அவர் வேறு யாரிடமும் பேசவில்லை... தன்னை அழைத்த தனது ஆருயிர் நண்பன் கதிரேசனையும் அவர் திரும்பி பார்க்கவில்லை...
அங்கு அவர் கண்ட இன்னொன்று தேவியின் அண்ணனது சீருக்கு முதன்மை அளிக்காமல் இவரது சீருக்கே முதன்மை அளிக்கப்பட்டது...
அனைவரை விட மிகவும் சந்தோசமாக இருந்தவள் தேன்நிலா மட்டுமே...
அவள் பிறந்ததில் இருந்து அவளை திரும்பி கூட பார்க்காத அவளது மாமா இன்று அவளுக்காக அனைத்தையும் செய்கிறார்...
அதுவும் வேல்விழிக்கு என்ன என்ன செய்தார்களோ அதை அனைத்தையும் தேன்நிலாவிற்கு செய்தனர்...
அளவில்லா ஆனந்தத்தில் இருந்த தேன்நிலாவிற்க்கு தெரியவில்லை...இதை அவர்கள் யாரும் மனம் உவந்து செய்யவில்லை என்று...
அழகாக அந்த விழா முடிந்திருந்தது...
ஊரே சந்தனபாண்டியனை புகழ்ந்து தள்ளியது...விட்டுக்கொடுக்காமல் அவர் செய்த சீர்வரிசைகளை பார்த்து...
அதை கேட்டு சந்தோஷபடவேண்டியவர்கள் யாரும் சந்தோசமாக இல்லை...அன்னத்தின் குடும்பத்தின் மனதிலும் வருத்தமே இருந்தது...
அந்த வருத்தத்தை காலம் மாற்றுமா...
காதலி காதலிக்க படுவாளா...
Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page
{kunena_discuss:1175}