“என்ன மச்சான் .. இப்படி கல்யாணம் ஆனதும் வைபை கட்டிகிட்டு கொஞ்சாமல் இந்த பைலை கட்டிகிட்டு அழுதுகிட்டுஇருக்க??? அங்க பாவம் சிச்டர் ஹாலுல தனியா உட்கார்ந்து இருக்காங்க ... ஆமா கல்யாணத்தன்னிக்கு சிஷ்டரை நீ பார்த்த லுக்குக்கு இந்நேரம் ஒரு மாதத்திற்கு ஹனிமூன் இல்ல போயிருப்பேன் னு நினைச்சேன்... இப்படி இன்னும் இந்த ஆபிஷையே கட்டிகிட்டு அழுவறியே போகாமல் “ என்று அவன் முன்னே அமர்ந்தான்...
அவனின் குரலை கேட்டு நிமிர்ந்தவன்
“வாடா... ஹனிமூன் தானே .... ம்ம்ம் மெதுவா போலாம் டா.. கொஞ்சம் வேலை நிறைய இருக்கு.. முடிச்சிட்டு ஒன் மந்த் போலாம்னு இருக்கேன்.." என்று சிரித்தான்...
"இல்லையே.. என்னவோ தப்பா இருக்கிற மாதிரி இருக்கே.. நீ ஆயிரம் வேலை இருந்தாலும் இந்த மேட்டர் முன்னாடி வேலை பின்னாடினு சொல்ற ஆள் ஆச்சே .
...
This story is now available on Chillzee KiMo.
...
றான் பயந்தவனாக
“என்ன ப்ரதர்?? ... அவர் தான் வரமட்டேங்குறார் இல்லை.. அவரை ஏன் கட்டாய படுத்தறீங்க??? ஒருத்தர் திருந்த முயற்சி செய்தால் பிடிக்காதே... உங்களை மாதிரி ப்ரென்ட் இருக்கிறதால தான் பாதிபேர் திருந்தனும் னு நினைக்கிறவங்க கூட திருந்த முடியாம போய்டறாங்க” என்று பொரிந்து தள்ளினாள்...