“ஆமா... பொல்லாத ஷ்டேட்டஷ்.. “ என்று முனகியவள்
உர் என்று காரில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள்... அவளின் அலுவலகத்தை அடைந்தவன் அவள் இறங்கவும்
“மறக்காமல் போன் பண்ணு.. இங்க தான் காரை நிறுத்திட்டு சக்தி உனக்காக காத்திட்டு இருக்கான் “என்றவன் வேகமாக கிளம்பி சென்றான்...
ஏனொ அவனின் கோபம் அவளை பாதித்தது.. அவள் முகம் வாடிப் போனது
“திருமணம் முடிந்து முதல் முதலா வேலைக்கு போறேன்... ஒரு ஆல் தி பெஷ்ட் கூட சொல்லாம போறானே !! “ என்று திட்டிகொண்டே உள்ளே நுழைந்தாள்...
அவளை கண்டதும் அவளுடன் பணிபுரிந்த அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர்... இதுவரை அவளுடன் பேசாதவர்கள் கூட அவள் ஆதித்யாவின் மனைவி என்று தெரிந்ததும் வழிய வந்து பேசினர்..<
...
This story is now available on Chillzee KiMo.
...
ீங்க கிளம்புங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் முடிச்சிட்டு நானே வந்திடறேன்” என்றாள்..
“இல்லை மேடம்.. உங்கள தனியா விடக்கூடாதுனு சாரோட உத்தரவு.. நீங்க எங்க போகனும்னு சொல்லுங்க, நான் கூட்டி போறேன்.. “ எனறு அவனும் விடாமல் கூறவே வேற வழி இல்லாமல் காரில் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள்..