பின் தனக்கு தெரிந்த ஒரு சில கம்பெனிகளில் சென்று வேலைக்காக விசாரித்தாள்... எல்லாருமே இவளுடைய புரபைலை பார்த்ததும் இவள் ஆதித்யாவின் மனைவி என்று தெரிந்ததும் தயங்கி மறுத்து விட்டனர்...
“சே... என்ன எல்லாருமே ஒரே மாதிரி சொல்றாங்க...ஒரு வேளை நிஜமாலுமே அவன் மனைவி ங்கிற பதவிக்கு அவ்வளவு பவரோ?? .. “என்று யோசித்தவள் அருகில் இருந்த கோயிலை கண்டதும் அங்கு நிறுத்த சொன்னாள்..
கோயிலுக்குள் சென்று வணங்கிவிட்டு, சிறிது நேரம் அங்கயே அமர்ந்து இருந்தவள் மீண்டும் வீட்டிற்கே வந்தாள்.. தன் அறைக்கு சென்று ஷோபாவில் பொத்தென்று அமர்ந்தவள்
“சே!! இது என்ன ஹவுஷ் அரெஷ்ட் மாதிரி இருக்கு??.. வெளில எங்கயும் தனியா, சுதந்திரமா போக முடியாது போல.. என்ன இந்த பணக்கார வாழ்க்கையோ.. எப்படித்தான் இப்படி இருக்க முடியுதோ?? “ என்று நொந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ோலம் அவனுக்கு என்னென்னவோ செய்தது...
அவளை அப்படியே அணைத்து துடித்து கொண்டிருக்கும் அவளின் இதழ்களை அடக்க துடித்தது அவன் இதழ்கள்...
தான் இவ்வளவு பேசியும் அவனிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் வராமல் போக
“என்ன நான்பேசினதில பயந்துட்டானா?? “ என்று ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள்..