அவளின் நக்கலான சிரிப்பை கண்டு அவன் எதுவும் பேசாமல் அவளை முறைத்தான்..அவன் பேச ஆரம்பித்தாள் தன் கட்டுபாட்டை இழந்து அவளை ஏதாவது செய்து விடுவோம்.. அதுவும் இந்த பொது இடத்தில் தன் அம்மா வேலை பார்க்கும் இந்த மருத்துவமனையில் வச்சு எதுவும் நடந்திடக்கூடாது என்று பல்லை கடித்துக் கொண்டிருந்தான் பாரதியின் கையை இறுக பற்றியவாறு...
அதற்குள் பாரதிக்கு ஓரளவு புரிந்தது அவள் யாராக இருக்கும் என்று..
நேற்று அவன் பட்ட வேதனை கண் முன்னே வந்தது... அவளுக்குமே கோபம் வந்தது.. இருந்தாலும் தன்னை கட்டு படுத்தி கொண்டவள் அந்த ஷ்வேதாவை உற்று பார்த்தாள்..
நல்ல வெள்ள வெளேரென்று வழுவழுப்பான ஒல்லியான தேகம்.. மேலும் அவள் செய்திருந்த ஒப்பனையில் தங்க சிலையாக ஜொலித்தாள்... மேலும் மாடர்னாக ஆடை அணிந்து பார்க்கும் பெண்கள் அனைவரையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாடி ஒரு தாலிய கட்டிக்க... அத வச்சாவது அவன் சொத்து கொஞ்சம் உனக்கு கிடைக்கும்.. இல்லனா நடுத்தெருவுல தான் நிக்கனும்..
உன் நிலையே அங்க ஆட்டம் காணறப்போ அடுத்தவங்களுக்கு நீ அட்வைஷ் பண்ண வந்துட்ட... போடி...இனிமேல் ஏதாவது எங்க அத்தைய பத்தி பேசின தொலைச்சிருவேன் “ என்று கை நீட்டி மிரட்டி விட்டு