(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 04 - மகி

valentines

ல்லூரி.. எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை.. பல அனுபவங்கள் அங்க தான் கிடைக்கும்.. எதிர்பார்க்காத சில விஷயங்கள் நடக்கவும் செய்யும்.. பல விஷயங்களை கத்துக்கவும் செய்யும்.. ஒவ்வொருத்தரும் அவங்களுடைய கல்லூரி வாழ்க்கையை எப்பவும் மறக்கமுடியாத ஒன்னாக இருக்கும்.

அதே போல தான் தன்னுடைய முதல்நாள் கல்லூரியை பற்றி பேசிக்கொண்டு இருந்தான் மிகவும் உற்சாகமாக.. அதை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தனர் அவனின்தங்கையும்,தம்பியும்..

என்ன அண்ணா பொண்ணுங்களை பத்தியெல்லாம் பேசற.. புதுசா இருக்கே இது சரியில்ல..

கார்த்தி என்ன பேச்சு இது எல்லாம் பாப்பா இருக்கும் போது.. சற்று குரலில் கண்டிப்புடன் கூறவும்..

சாரிண்ணா எதோ விளையாடுக்கு தான் சொன்னேன்..

அடவிடுங்கப்பா நான் ஒன்னும் நினைச்சுக்கமாட்டேன்.. அபி அண்ணா முதல்ல அந்த பொண்ணை பத்தி சொல்லுங்கண்ணா.. பேரு என்ன..

கர்னி..

என்ன பேர் இது கர்னின்னு.. இப்படி எல்லாமா பேர் வைப்பாங்க..

அவ முழுபேர் மணிகர்னிகாகண்ணன்.. ரொம்ப செல்லம்மா வளர்ந்திருக்கா.. நல்ல பொண்ணு.. எல்லார் கூடவும் ஜாலியா பழகர பொன்னு.. இன்னைக்கு கீழவிழுந்துட்டா நான் காலேஜ் முடிஞ்சு வரும் போது பாத்தேன்.. இன்னும் அவ வளர்ந்த குழந்தை போல நடந்துகிட்டா.. சோ கியூட்தெரியுமா..

குழந்தை போல வா.. அப்போ ரொம்ப பாவம் எப்படி சமாளிக்கராங்க காலேஜ்ல..

பாப்புகுட்டி அவ ஒருத்தி போதும் எங்க காலேஜ்சியே வித்துருவா செம வாய்.. ரேடியோல கூட புரோகிராம் பன்னரா பாப்பு..

ரேடியோவில்லையா.. அபி அண்ணா அவங்க பேர திருப்பி சொல்லுங்க..

மணிகர்னிகாகண்ணன்.. ஏன் பாப்பு..

அண்ணா அவங்க உன்கூடவா படிக்கராங்க.. என மிகுந்த மகிழ்வுடன் கேட்டாள்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆமா பாப்பு.. ஏன் என்ன ஆச்சு..

அச்சோ அண்ணா அவங்க தான் என்னோட பேவரட்ரேடியோஜாக்கி மனு.. சனி,ஞாயிறு ஒருமணி நேரம் புரோகிராம் பன்னுவாங்க.. சூப்பரா இருக்கும்.. ரொம்ப நல்லா பேசுவாங்க.. எனக்கு ரொம்ப பிடிச்சவங்க அண்ணா.. ஒரு நாள் என்னை அவங்களை பார்க்க கூப்பிட்டு போங்களேன்..

பாப்பு உனக்கு கர்னிய தெரியுமா..

அண்ணா நான் சொல்லுவன்ல ஆர்ஜே மனு அவங்க முழு பேர் மணிகர்னிகாகண்ணன்.. எங்க ப்ரன்ஸ் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்..

அவ்வளவு நல்லா புரோகிராம் பண்ணுவாங்களா..

ஆமாண்ணா ரொம்ப நல்லா பேசுவாங்க.. நீவேணா வர சனி,ஞாயிறு கேட்டுபாரேன்..

பாப்புகுட்டி அதுக்கு ஏன் அவ்வளவு நாள் வெய்ட் பண்ணனும்.. இன்னைக்கு நைட் கூட கேக்கலாம்..

அச்சோ அண்ணா நீ அவங்க புரோகிராம கேட்டதேயில்ல.. நான் ரெகுலரா கேக்கரேன் என்னை ஏமாத்தமுடியாது..

உன்ன நான் ஏமாத்தல செல்லம்.. இன்னைக்கு அவங்க புது புரோகிராம் பன்ன போராங்க நாம அதை சேர்ந்தே கேக்கலாம்..

வாவ் புது புரோகிராமா.. ஐய்யா.. சூப்பர்.. சூப்பர்.. உனக்கு அவங்களே சொன்னாங்களாண்ணா.. என குதூகழித்தாள்..

ம்.. அவங்க தான் சொன்னாங்க..

எத்தனை மணிக்கு அண்ணா..

நைட் 10.30-க்கு செல்லம்..

ஓகே.. நான் அப்போவரேன்.. இப்போ போய் என்னோட ஹோம்வொர்க்கு எல்லாம் முடிச்சரேன்.. என புன்னகையுடன் அவள் அறைக்கு ஓடினாள்..

ஏன் அண்ணா உண்மையா அவங்க நல்லா பேசுவாங்க போல..

ம்.. அழகா பேசுவா.. நானும் கர்னி புரோகிராம் கேட்டதுயில்ல இன்னைக்கு கேக்கனும்..

இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் வேலைகளை பார்க்க சென்றுவிட்டனர்..

பார்வதி.. என்ன பன்னிகிட்டு இருக்க.. தூங்கலையாம்மா..

இன்னும் கொஞ்சநேரம்.. உங்களுக்கு தூக்கம் வந்தா நீங்க தூங்குங்க..

இன்னும் தூக்கம்வர்லையா என்ன ஆச்சு என்னோட பார்வதிக்கு..

சிவா என அவரின் மார்பில் முகம்புதைத்தார் பார்வதி..

என்ன ஆச்சு பார்வதி.. என ஆதர்வாக தலையை வருடி கொடுத்தார்.. சிவஞானம் மனு,அபி கல்லூரி பேராசிரியர்..

சிவா நமக்கு கல்யாணம்ஆகி 20-வது வருஷம் ஆகுது.. ஆனாலும் என்னால உனக்கு ஒரு குழந்தையை கொடுக்கமுடியல்ல.. அவரை மேலே பேசவிடாமல் இவர் தொடர்ந்தார்..

நமக்கு குழந்தை இல்லைங்கரதுக்கு நீ மட்டும் எப்படி பொறுப்பாக முடியும் செல்லம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.