ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி..
அருகில் வரலாமா..
வருவது சரிதானா உறவும் முறைதானா..
வாராய் அருகே மன்னவன் நீயே
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
காதல் சமமன்றோ
வேதம் இலையன்றோ காதல் நிலையன்றோ..
ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ..
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ..
வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலரன்றோ..
மன்னவர் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும்
ஓன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ..
ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி..
அருகில் வரலாமா.. வருவது சரிதானா உறவும் முறைதானா..
பாடும் பறவைக் கூட்டங்களே பச்சை ஆடை தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களேன்..
ரோஜா மலரே ராஜகுமாரி..
ஏழை என்றாலும் ராஜகுமாரன்..
உண்மை இதுவன்றோ..
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ..
அந்த இரவின் இனிமையுடன்.. இந்த பாடல் இன்னும் இதம் சேர்ந்தது.. அந்த பாடலை கேட்போரின் மனநிலையில்..
மற்றவர்களின் மனநிலை என்ன என்பதை அடுத்தவாரம் காணலாம்.. தங்களின் கருத்துகளுக்காக காத்திருப்பேன் தோழமைகளே..
தொடரும்
Go to Valentines day story main page
{kunena_discuss:1230}