ஒரு மனிதனின் பிடிவாதத்திற்கு எல்லையும் அதைத் தடுக்கும் வல்லமையும் எங்கோ ஒரு மூலையில் வியாபித்திருக்கும் அல்லவா..?? அப்படி ஒரு எல்லையும் முடிவும்தான் நிஷாவிற்குத் தாரிகையானவள்..!!
“நீ இங்கிருந்து கிளம்பறேன்னு சொன்னீன்னா நானும் உங்ககூடவே அப்படியே வந்திருவேன் நிஷா..”, என்ற தாரிகையின் வார்த்தைகள் நிஷாவை அங்கேயே தேங்கச் செய்திட.. ஆழக்குழி தோண்டி நிறுவப்பட்ட சிலையாகவே நின்றுவிட்டாள் குழந்தை..!!
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அவளை நிறுத்திவைக்கப்பட்டது தாரிகையின் வார்த்தைகள்..!! இன்றுவரை தாரிகையுடன் நிஷாவைப் பிடித்துவைத்திருப்பது இந்த வார்த்தைகளே..!!
மற்றவர்களுக்கு அவ்வார்த்தைகள் சாதாரணமாய்த் தோன்றலாம்.. ஆனால் நிஷாவிற்கு அது ஒரு பிடிப்பு..!!
தன்னையும் ஒருத்தி மதித்து தன்னிடமிருக்கும் அனைத்தையும் துறந்து தன்னுடன் வருகிறாள் என்றால் என்ன அர்த்தமாம்..??
இது எந்த வகையைச் சேர்ந்த பந்தமென்று புரிந்திடவில்லை என்றபொழுதும் எதுவோ ஒன்று இருவரையும் இறுக்கமாய் பிணைத்திருந்தது..!!
இம்மியளவும் கூட தாரிகையைவிட்டு பிரியாதவளாய் நிஷா அவளுடனேயே இருந்துகொள்ள.. பரத்வாஜரக்கு அத்தனை நிம்மதியாய்..!! என்னவோ தாரிகையை நிஷா இனி பார்த்துக்கொள்வாள்.. நிஷாவைத் தாரிகை பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை..!!
வணக்கம் தோழமைகளே..!!
புதிய வருடத்தின் முதல் பதிவு..!!
படித்துவிட்டு கருத்துக்களை பதிவு செய்யவும்..!!
நன்றி..!!
உருவெடுப்பாள்..
{kunena_discuss:1168}