எதையும் தாங்கள் சொல்லாமல் அவர்களே புரிந்துகொண்டு செய்ததுதான் அவர்களை நெகிழச் செய்தது.
பெண் மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் முடிந்த பிறகுதான் சிவரஞ்சனி தன் புகுந்த வீட்டிற்குச் சென்றாள்.
அதன் பிறகு கணவனும், மனைவியும் மட்டுமே.
வீடே வெறிச்சென்று இருந்தது.
பெண்களைப் பெற்ற பெற்றோருக்கு கடைசியில் வாய்த்தது இதுதானே.
சந்திரசேகராவது வேலை என்று வெளியில் சென்றுவிடுகிறார். ஆனால் சீதாலெட்சுமிதான் பாவம்.
மகள்கள் இருவரையுமே படித்து முடித்ததும் அவள் வேலைக்கு என்று வெளியில் அனுப்பவில்லை.
அம்மா அம்மா என்று காலடியிலேயே சுத்தி வந்தனர்.
இப்போது அவர்கள் வீட்டில் இல்லை என்ற உடன் அவளுக்குத்தான் மிகவும் சிரமமாக இருந்தது.
எப்படியோ மகள்களுக்கு நல்ல குடும்பம் வாய்த்தது என்ற சந்
...
This story is now available on Chillzee KiMo.
...
து.
ஆனால் மாப்பிள்ளை எங்கும் வேலை பார்க்கவில்லை என்றதும் சில பேர் தயங்கினர்.
பையன் நன்றாகப் படித்திருக்கிறான். ஆனால் விவசாயம் தான் பார்க்கிறான். அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
எங்காவது வேலைக்குச் சென்றால் பெண் தருகிறோம் என்று வந்தவர்களுக்கு அவர்கள் பதில் சொல்லவில்லை.