இந்தக் காலத்தில் படித்த படிப்பைவிட்டுவிட்டு ஒருவன் விவசாயம் பார்ப்பது என்பதே அரிது.
அதுவும் அவனே ஆர்வத்துடன் பார்க்கும்போது உனக்குத் திருமணம் நடக்க வேண்டும். நீ வேலைக்குப் போ என்று சொல்ல மனம் வரவில்லை. இப்படியே எல்லோரும் விவசாயத்தை விட்டுவிட்டு வேலைக்குப் போ என்றால் யார்தான் நமக்கு சாப்பாடு போடும் வேலையைப் பார்ப்பது?
அதுவும் திருமணத்திற்கு முன்பே தங்கள் ஆதிக்கத்தை மாப்பிள்ளை மீது காட்டுவதை அவர்கள் விரும்பவில்லை.
அவனை அவனாகவே ஏற்றுக்கொள்பவர்கள்தான் வேண்டும் என்று உறுதியாக இருந்தனர்.
சரவணன் எதையும் கண்டுகொள்ளவில்லை.
சிவரஞ்சனி தன் மாமனாரிடம் வந்தாள்.
“மாமா.”
“என்னம்மா? சொல்லு.”
“கையில் வெண்ணெயை வைத்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
படியே அண்ணனைப் போல் மனதை மறைத்து வைத்திருக்கிறான்.
மனதிற்குள் செல்லமாய் கொழுந்தனைத் திட்டியவள் நேரத்தைக் கடத்தவில்லை.
மாமனார், மாமியாரிடம் அவனுக்கும் விருப்பம்தான் என்பதைச் சொல்லி, உடனே ஆக வேண்டியதைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டாள்.
அதன் பிறகு எல்லாமே வேகமாக நடந்தேறின.