பின் அனைவரும் காலை உணவை முடித்து கோவிலுக்கு கிளம்பினர்... ஜானகி அந்த முருகன் கோவிலில் விஷேச பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார்... அனைவரும் கோவிலை அடைந்ததும் தயாராக இருந்த ஐயர் பூஜையை தொடங்க அனைவரும் மனம் உருகி அந்த வேலனை வேண்டி கொண்டனர்..
பின் ஐயர் பூஜை பண்ணி கொண்டு வந்திருந்த தட்டில் இருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து ஆதியிடம் கொடுத்து அதை பாரதியின் கழுத்தில் கட்ட சொன்னார்....
ஆதி புரியாமல் முழிக்க,
“இது ஒரு பரிகாரம் கண்ணா... அதனால உங்க கல்யாண நாள் அன்னைக்கு மறுபடியும் அந்த வேலனை மனதார வேண்டிகிட்டு இதை என் மறுமக கழுத்துல கட்டு “ என்றார்....
ஐயர் அனைவர் கையில் சிறு அட்சதையை கொடுக்க, ஆதியும் அதே மாதிரி மனதில் அந்த சிங்கார வேலனை வேண்டி கொண்டே பாரதியின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அதற்குள் தர்மலிங்கம் சுசிலாவும் உள்ளே வர, கையில் தூங்கி கொண்டிருந்த தன் பேத்தியை தொட்டிலில் போட்டார் சுசிலா... பாரதி தன் மகளை காண,
“பாரதி.. நாங்க பத்துக்கறோம் எங்க பேத்தியை... நீ போய் என் மகனை நல்லா கவனிச்சுக்கோ.. அது போதும்.. “ என்று சிரித்தார் சுசிலா.. அவள் கன்னங்கள் சிவக்க,