“அப்ப உங்களுக்கு என்னை பிடிக்குமா?? ... அப்ப ஏன் அப்படி என் மேல எரிஞ்சி விழுந்தீங்க..” என்று தன் மனதில் உழன்று கொண்டிருந்த தன் சந்தேகத்தை கேட்டாள்.. இவன் திட்டியதால தான நான் என்னை அவனுக்கு பிடிக்கலைனு நினைத்து என்னென்னவோ உளறினேன்.. “ என்று நினைத்தாள்...
“ஹ்ம்ம்ம்ம் அது என்னவோ தெரியலை... உன்னை முதல் முதலா பார்த்தப்பயே இந்த முட்ட கண்ணை பார்த்து விழுந்திட்டேன் போல... இல்ல... அதுக்கு முன்னாடியே அம்மா எப்பவும் உன் புராணத்தையே பாடிகிட்டிருந்ததனால் என்னை அறியாமலயே நீ என் மனதுக்குள்ள வந்திட்ட போல...
ஆனால் எனக்குள்ள கனன்று கொண்டிருந்த நெருப்பும் அதோடு நான் எங்க உன்கிட்ட சாய்ஞ்சுடுவேன் ன்ற பயமும் தான் உன்னை அப்படி திட்ட வைத்தது... அதாவது என்னையே என்கிட்ட இருந்து காப்பாற்றி கொள்ள உன்னை ஆயுதமா பயன்படுத்தி கிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ட ஓடி போய்ட்டா போல இருக்கு... இன்னும் தாலி கட்டிக்காமலயே குடும்பம் நடத்தறா போல.. இப்ப அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை போல.. இப்ப அவனை தனக்கு தாலி கட்டி பொண்டாட்டியா ஏத்துக்க சொல்லி வற்புறுத்த, அந்த ஆளு இவளை கழட்டி விட்டு எஷ்கேப் ஆக பார்ப்பான் போல.. தாலி கட்ட மாட்டேன்.. என்று மறுத்துட்டான் போல..