போன வாரம் இரண்டு பேரும் இங்க பார்க்கிங்கில் நின்று சண்டை போட்டு கிட்டிருந்தாங்க.. நான் என் ஷிப்ட் முடிஞ்சி என் வண்டியை எடுக்க போனப்போதான் எல்லாம் கேட்டேன்.. அந்த ஆளு மறுத்து விட்டதால, இந்த பொண்ணு குறுக்கு வழியில அவனை மடக்க ஏதோ முயற்சி செய்யும் போல..
அவனுக்கு தெரியாமலயே அவன் குழந்தையை IVF மூலமா அவ வயித்துல உருவாக்கத்தான் இப்ப வந்திட்டு போறா.. அதுவும் இதுல எக்ஷ்பர்ட் ஆன நம்ம சுசிலா மேடம் வேண்டாம்னு அவருக்கு அடுத்து கீழ இருக்கிற சீனியர் டாக்டர் கிட்ட கன்சல்ட்டிங்கு வந்திட்டு போறா...
ஒரு குடும்பத்தை கஷ்டப்பட வச்சவ இவ மட்டும் நல்லா இருந்திடுவாளா.. அதான் அந்த கடவுளே இவளுக்கு இப்படி கொண்டு வந்து விட்டிருக்கான்.. “ என்று பெருமூச்சு விட்டாள் அந்த சிஷ்டர்..
அதை கேட்ட பாரதிக்கு ஒரு கணம் மகிழ்ச்சியாக இர
...
This story is now available on Chillzee KiMo.
...
எவ்வளவு பெரிய தவறு செய்தும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அவளை மன்னித்து, ஏன் இப்படி செய்த என்று மறந்தும் ஒரு வார்த்தை கூட கேட்காமல் தன் மேல் அனபை மட்டுமே பொழிந்து வரும் தன் குடும்பத்தை நினைத்து இன்னும் பெருமையாக இருந்தது... இப்படி பட்ட குடும்பத்தில் வந்து பிறக்க கொடுத்து வச்சிருக்கணும்..