மீண்டும் ஒரு முறை தன் பெற்றோர்களின் காலில் விழ, தர்மலிங்கம் அவள் தலையை வாஞ்சையுடன் தடவி ஆசிர்வாதம் பண்ணினார், பின் சுசிலா ஜானகியின் காலில் விழ, ஜானகி அவளை தூக்கி
“மறுமகளே சொன்னது நினைவு இருக்கட்டும்... என் பையனை நல்லா கவனிச்சுக்கோ.. சீக்கிரம் எனக்கு ஒரு பேரனை பெத்துக் கொடுக்கனும்.. “என்று சிரிக்க அருகில் நின்ற சுசிலா ஜானகியை பார்த்து முறைத்தார்..
“உனக்கு வேற வேலையே இல்லையா ஜானகி.. அவ என்ன உனக்கு பேர புள்ளைய பெத்து கொடுக்கிற மெசினா?? ...டாக்டர் அட்வைஷ் படி மூனு வருசத்துக்கு அப்புறம் தான் அடுத்த குழந்தைய பத்தி யோசிக்கணும்... “ என்று முறைத்தார்
“ஆஹா.. நான் ஒருத்தி..கூடவே ஒரு டாக்டரை கட்டிகிட்டு சுத்தறதை அப்பப்ப மறந்துடுறேன்.. அவளும் அப்பப்ப டாக்டர் சுசிலாவா மாறிடறா.. மாமியார் சுசிலாவா பேசு டீ
...
This story is now available on Chillzee KiMo.
...
னிடம் நீட்டினாள் எங்க அவன் இன்னும் கிட்ட வந்து விடுவானோ.. என்று அஞ்சி...
அவள் பயம் புரிந்து அவனும் சிரித்து கொண்டெ கை நடுக்கத்துடன் அவள் நீட்டிய பால் சொம்பை வாங்கி அருகில் இருந்த டீபாயில் வைத்தவன் அவளை கைப்பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்து கொண்டான்..