ஆம் என தலையசைத்த சுவாதி “ராமர் பாலத்தை கட்ட அணில்கூட உதவலயா? ஏதோ எங்களால முடிஞ்ச அளவு காப்பாத்த டிரை பண்றோம். அதுக்குள்ள எங்க ஹெட் மூலிகைகளுக்கு பேடண்ட் ரைட்ஸ் வாங்க பாக்குறாரு.” சுவாதி
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“இவங்க ஹெட் கூட இப்ப இங்கதான் இருக்கார்” பத்ரிநாத் கூற
“நான் அவர மீட் பண்ண முடியுமா?” ஆகாஷ் ஆவலாய் கேட்டான்
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சாகம்பரியின் "மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம்" - மர்மமும் காதலும் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“வாங்க என்னோட” சுவாதி அழைத்துச் சென்றாள்.
சுவாதியை தொடர்ந்து ஆகாஷ் சாரு மற்றும் பத்ரிநாத் சென்றனர். இரண்டாவது தளத்தில் சுவாதி ஒரு வீட்டை திறந்துக் கொண்டு உள்ளே போக அங்கே இவர்கள் ஹெட் ராமமூர்த்தி இருந்தார்.
அவரை பார்த்த நொடி ஆகாஷ் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பவர் “டாட்” என தன் அப்பாவை கட்டி அணைத்தான். “இவர் எப்ப யு.எஸ்ல் இருந்து வந்தார். அம்மா எங்கே?” என பல கேள்விகளை மனம் அடுக்கின.
அந்த ஆர் என்கிற லோகோ தன் அப்பாவின் கையில் உள்ள மோதிரம் என்பதும் நினைவுக்கு வந்தது. சாருவின் எண்ணங்களும் அதையே நினைவுப்படுத்தியது. அவளும் லலிதாவும் சேர்ந்து செய்த சேட்டை அல்லவா அது?
சாருவின் கண்கள் சுவாதி பக்கம் பாசத்தோடு சென்றது. ஆனால் சுவாதி சாருவை கவனிக்கவில்லை.
தொடரும் . .
{kunena_discuss:1199}