தனது வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு தந்தையுடன் இருந்து அவரைக் கவனித்துக்கொண்டாள்.
இப்போது அவருக்குத் தேவையானது அன்புதான் என்பதைப் புரிந்துகொண்டவள் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்த உடன் அதிக நேரம் அவருடன் செலவழிக்குமாறு பார்த்துக்கொண்டாள்.
அவர் இருக்கும் வரை அவரை நிம்மதியுடன் பார்த்துக்கொண்டாள்.
"இதுதான்மா நீ இன்டர்வியூவுக்கு வந்த கம்பெனி."
தனது வண்டியிலேயே மகாலெட்சுமியை அழைத்து வந்த கௌதம் அந்த கட்டிடத்தைக் காண்பித்தார்.
அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
"மகா பில்டர்ஸ்" என்ற எழுத்துக்கள் மின்னின.
கருப்பையாவின் தொழில் மீது அவளுக்கு இருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்ட கௌதம் அவளுடைய மனதில் இந்தக் கம்பெனி பற்றிய கனவையு
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்ல கம்பெனி. நல்ல சம்பளம். ஆனால் அவள் அங்கே வேலைக்குச் செல்லவில்லை.
அவளுக்குத் தந்தை உருவாக்கிய இந்தக் கம்பெனியிலேயே வேலை பார்க்க வேண்டும் என்று ஆசை.
தந்தையுடன்தான் இருக்க முடியவில்லை. அவர் தொழில் சாம்ராஜ்ஜியத்தில் தான் ஒரு அங்கத்தினராகவாவது இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.