தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா
வெண்ணிலா சென்றதும் கௌவுதமிற்கு ஹாலில் இருப்பது மூச்சுமுட்டுவது போல் தோன்றவே அவன் மடமடவென்று படியேறி மாடியில் உள்ள தனதறைக்குச் சென்றுவிட்டான்.
அறைக்குள் வந்தும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான்.
வெண்ணிலா 'உன் நண்பர்களில் யாராவது என்மேல் ஆசைப்பட்டால்' என்று அந்த வார்த்தைகளை ஒருமுறைதான் கூறினாள். அவள் கூறிவிட்டு சென்றுவிட்டாள். ஆனால் கௌவுதமின் காதுகளில் அவை விடாமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னேல இது சரிப்பட்டு வராதுன்னு நான் சொல்லச்சொல்ல கேட்காமா ரெண்டுபேரும் சேந்து தேவையில்லாத பிரச்சனையா இழுத்து வச்சிருக்கீங்க" என்றான் கௌவுதம் குறலில் அதீத எரிச்சலுடன்.
"உனக்கு எப்படி தெரியும் கௌவுதம். பிரணவ் எப்படி அந்த நேரத்துக்கு சரியா அங்க வந்தான்" என்றான் முரளி சந்தேகமாய்.