"என்ன அது"
"அவன் நம்மள பிடிச்சு போலிஸ்ல ஒப்படைச்சா நாம யார மாட்டிவிடுவோம்"
"கௌவுதமத்தான்"
"ம்ம்.. அது அந்த குட்டச்சிக்கும் தோனியிருக்கும். அதுதான் அவ பிரணவ்கிட்ட நான் உன் காதலிய காப்பாத்துனதுக்கு பதில் உதவியா எனக்கு இத செய்னு சொல்லியிருப்பா. புரியுதா"
"ம்ம்... புரியுது. இப்போ நாம என்ன முரளி செய்ய"
"வேற வழியில்ல. நாம இப்போ சென்னைக்குப் போறதுதான் நமக்கு நல்லது" என்று இருவரும் பாரைவிட்டு வெளியே வந்து கௌவுதமின் காரின் அருகில் சென்று நின்றுகொண்டனர். டிரைவர் வந்ததும் அவரிடம் கார் சாவியை கொடுத்துவிட்டு லக்கேஜை பெற்றுக்கொண்டு ஊருக்குச் சென்றனர்.
முரளியையும் அசோக்கையும் ஊருக்கு அனுப்பிய பிறகுதான் கௌவுதமிற்கு நிம்மதியாக இருந்தது.
வெண்ணிலாவைப் பார்த்து அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
சமாலிப்பது' என பயந்த வெண்ணிலா கௌவுதமின் கையிலிருந்து சட்டென்று போனைப் பிடுங்கி "அது.... அதுவந்து. சாரி தூங்கிட்டு இருந்ததால வேகமா வந்து கடவத் தொறக்கமுடியல" என்று பேச்சை மாற்றினாள்.
"ஓஓ...அப்படியா ம்ம்... போன் ஏன் கீழகிடந்தது"
"அது கை தவறி கீழ விழுந்துருச்சு நான் பாக்கல"