வெண்ஸ் சொல்வதும் சரிதான் கௌவுதம் போ என்று சொல்லியிருந்தால் எங்கு போயிருப்போம் என்ன செய்திருப்போம் என்று யோசித்துப்பார்த்தால் ஒன்றும் விளங்கவில்லை. இங்கு கிடைக்கும் பாதுகாப்பும் நிம்மதியும் வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது என்றே தோன்றியது.
'ஆமா வெண்ஸ். நல்லவேல கௌவுதமுக்கு நான் சின்ன வயசுல இருந்தே ப்ரண்டுங்குறதால அவன் என்ன போகச் சொல்லல. தப்பிச்சுட்டேன்ல'
'ஹிஹிஹி..... ஆமா'
'சரி தூக்கம் வர்ற மாதிரி இருக்கு வா போய் தூங்குவோம்' என்று தூங்கச்சென்றுவிட்டாள்.
ஹாஸ்டலுக்கு வந்த மித்ரா குளித்துவிட்டு வந்தாள். பின்பு அனிதாவுடன் சென்று இரவு உணவை முடித்துக்கொண்டு வந்து இருவரும் படுத்துவிட்டனர். அனிதா தூங்கிவிட்டாள். மித்ராவிற்கு தூக்கம் வரவில்லை.
வெளியே மழை பெய்து கொண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
்க கண்டினு பண்ணுங்க" என்றுவிட்டு பங்களாவினுள் சென்றாள்.
'இவ்வளவு காலையில் இவன் எங்கு கிழம்பிகிறான். நோற்று இரவு பேசும்போதுகூட எதுவும் சொல்லவில்லையே. சரி அவனையே கேட்போம்' என்று அவனது அறைக்கு முன்பு சென்று அறைக்கதவைத் தட்டினாள்.
"எஸ்" என்ற குரல் கேட்டதும் உள்ளே சென்றாள்.