வெண்ணிலாதான் பிரணவ்விடம் கூறினாள் என்று அவர்களிடம் கூற கௌவுதம் விரும்பவில்லை.
"எப்படியோ தெரிந்தது. அது இப்போ முக்கியம் இல்ல. நீங்க ரெண்டு பேரும் எங்க இருக்கீங்க"
"நாங்க பார்ல இருக்கோம்" என்று பாரின் பெயரைச் சொன்னான் முரளி.
"சரி அங்கேயே இருங்க. டிரைவர் வருவார் அவர்கிட்ட காரக் குடுத்துட்டு பஸ் பிடிச்சு சென்னைக்குப் போங்க"
"சென்னைக்கா எதுக்கு கௌவுதம் திடீர்னு சென்னைக்கு போகச் சொல்லுற"
"போங்கன்னா போங்களேன் ஏன் எதுக்குன்னு காரணம் தெரிஞ்சுக்கிட்டுத்தான் போவீங்களா" என்றான் கௌவுதம் கோபமாக.
கௌவுதம் தங்களின்மேல் கோபம் கொள்வது தங்களுக்கு நல்லதல்ல என உணர்ந்த முரளி "சரி சரி கௌவுதம் போறோம். ஆனா லக்கேஜ் எல்லாம் வீட்டுலதான இருக்கு நாங்க வீட்டுக்கு வந்து அத எடுத்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஒருவன். இன்நேரம் அவன் மித்ராவின் பாதுகாப்பிற்கு தக்க ஏற்பாடு செய்திருப்பான். நாம் மித்ராவை இப்போது தொட்டோம் என்றால் நாம்தான் மாட்டுவோம்."
"அவன் அவ்வளவு பெரிய ஆள்னா அவன் ஏன் நம்மள ஒன்னும் செய்யல"
"பிரணவ் நம்மள ஒன்னும் செய்யாததற்கு என்ன காரணம்னு எனக்கு இப்போது புரியுது"