இருவரும் எதிர்பார்க்காமல் நடந்த நிகழ்வில்.. இறக்கத்தில் புரண்டவர்கள்.. அபியின் மேல் கொடிப்போல படர்ந்து இருந்தால் மனு.. இருவரும் அவசரமாக எழுந்து நின்றனர்.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதை தவிர்த்தனர்..
முதல் முதலான ஒரு பெண்ணின் பரிசம் உள்ளுக்குள் என்னவோ செய்தது அபிக்கு..
என்ன தான் ஆண்கள் மனுவின் வாழ்க்கையில் புதிது இல்லை என்றாலும்.. அபியின் பரிசம் அவளை என்னவோ செய்தது தான்..
போலாம் கர்னி.. ஆகாஷ் பாத்துட்டு இருப்பான்.. அவன் முன்னே செல்லவும்..
ம்.. என நடந்தவள்.. ஜித்து.. என உட்காந்து கொண்டாள்..
என்ன ஆச்சுடாம்மா..
ஜித்து கால் வழிக்குது.. அவளின் வலது காலை காட்டினாள்..
அவளின் காலை பார்த்தவன்.. கீழவிழுந்ததுல கால்ல அடிபட்டு இருக்கும்டா.. ஹோட்டல் போய் ஆயில்மென்ட் போடலாம்.. இப்போ நடக்கமுடியும் தானே..
ம்.. முடியும்.. போலாம் என அவளை கை கொடுத்து எழுப்பி.. அவளை பிடித்த படியே நடந்தான்..
எதிர்பார்க்காமல் நடந்த நிகழ்வால் இருவரும் ஒருவரின்.. ஒருவர்.. விழிபார்ப்பதை தவிர்தனர்..
மன்னிச்சிடு கர்னி.. என்னால தானே.. இது எல்லாம் நடந்தது..
ஜித்து.. நானும் இதுக்கு ஒரு காரணம் தான்.. அதனால மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம்..
இல்ல கர்னி.. அதனால தானே.. உனக்கு அடிபட்டு இருக்கு..
ஐய்யோ.. ஜித்து.. இது எல்லாம் எனக்கு தினமும் நடக்கரது தான்.. பெருசா எல்லாம் கவலைபட வேண்டாம்..
ரொம்ப வழிக்குதாடா.. உண்மையான கவலையில் அவன் கேட்டான்..
அபியின் முகமே.. அவன் கவலையை வெளிப்படையாக காட்டியது.. நொண்டிக்கொண்டே ஹோட்டலுக்கு வந்தனர் இருவரும்..
மனுவால் நடக்கயிலாமல்.. அபியின் இடது கையை அவளின் வலது கையால் பிடித்துக்கொண்டும்.. அபி அவளை ஆதரவாக தோளைபிடித்து இருந்தான்.. மனு நொண்டிக்கொண்டே வரவும்.. தூரத்தில் இருந்து மனுவுக்காக காத்திருந்த ஆகாஷ் கண்ணில் தென்பட்டாள்.. உடனே பதறி ஓடிவந்தான் அவளிடம்..
அம்மூ.. என்ன ஆச்சுடாம்மா..
கீழவிழுந்துட்டேன்டா..
நினைச்சேன்.. என்னடா.. இந்த ஓட்டவாயி இன்னும் விழுகாம இருக்காளேன்னு நினைச்சுமுடிக்கலை.. விழுந்து எழுந்து வந்து நிக்கர..
பக்கி.. வழிக்குடா.. அவளின் பாவமான முகத்தை பார்த்தும்.. இரு ஆண்களுக்கும் கஷ்டமாக போனது..
சரிவா.. என ஆகாஷ்ம், அபியும் அவளை தாங்கிபிடித்தவரே.. அறைக்கு அழைத்துச்சென்றானர்..
எங்க காலை காட்டு.. ரொம்ப வழிக்குதா.. என ஆயில்மென்டுடன்.. அவளின் காலை சோதனை செய்தான்..
கொஞ்சம் வழிக்கு தான்.. சின்ன அடிதான்டா..
ஆமா.. வாய்க்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்ல.. ஓட்டவாய்.. என்ன பன்ன.. இப்படி விழுந்து வெச்சிருக்கர..
அது.. நானும்.. ஜித்தும்.. விளையாட்டா.. ஓடி.. விழுந்து.. அடிபட்டு.. அவள் விட்டு விட்டு இழுத்து கூறியதில்.. சிறிய அதிர்ச்சி ஏற்பட்டாலும்.. அதை வெளியில் காண்பிக்காமல்.. சிறு மென்னகையுடன்.. டேய்.. மச்சான்.. பார்த்து விளையாடுடா.. கேலிக்கூறலில் கூறினான்..
ஆனால் இதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் அபியில்லையே.. மனு வழிக்குதுன்னு சொன்னதுல இருந்து அவன் கவலையில் மூழ்கினான்.. அப்போது.. ஆகாஷ் கூறியது கேலிக்கு என்று கூட தோன்றாமல்..
சாரி மச்சான்.. என்றான் கவலையாக..
அவனின் முகத்தை பார்த்தவன்.. ஏய்.. இதுல என்ன இருக்கு.. அம்மூ.. ஒரு நாளுக்கு நாலுதடவையாவது விழுவா.. நீ ரொம்ப கவலைபட்டுக்காத மச்சி.. என கண்சிமிட்டினான்.. அதில்.. சற்று தெளிந்தவன்.. மெல்ல புன்னகைத்தான்..
போடா.. தகரடப்பா..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
ஆமா.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. ஓட்டவாய்..
அவர்கள் இருவரின் சண்டையில் புன்னகைத்தான் அபி..
சரி.. மச்சான்.. அவளுக்கு எதாவது சாப்பிட கொண்டுவாடா.. என்கவும் அவன் சென்றான்.. அபி மனுவுக்காக சாப்பாடு வாங்கிட்டு வரும் போது..
மச்சான்..
என்ன ஆகாஷ் இங்க நிக்கர.. கர்னி தனியாவா இருக்கா..