“ஜி நா சொன்னேன்ல ஷீட் இருக்கு வர முடியுமானு தெரில ஆனா வந்தப்பறம் கண்டிப்பா ரெண்டு பேரும் விருந்துக்கு என் வீட்டுக்கு வரணும்..”
“கண்டிப்பா ரேஷ் வரேன்..டேய் எரும உனக்கெல்லாம் வேற ஆப்ஷனே இல்ல ஒழுங்கு மரியாதையா வந்து சேரு..அங்கிள் ஆன்ட்டியை நா இப்போ போய்ட்டு இன்வைட் பண்ணிருவேன்.”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“அட ஜீ நீ இப்போ ஒரு கல்யாண பொண்ணா??உன்னையெல்லாம் பொண்ணாவே ஏத்துக்க முடியாது..மச்சான் இன்னும் கொஞ்ச நாள் தான்..உங்க வாழ்க்கையோட நிம்மதியெல்லாம் காத்துல பறக்க போகுது..”
“போதும் டா உன் ஷான்யா நிலைமைக்கு இவர் பரவால்ல தான்..ஆமா ரேஷ் நீங்க ஏன் இன்னும் கமிட் ஆகல?”
“ம்ம் அப்படி யாரையும் இதுவரை பார்க்கல பார்த்தா அடுத்த செகண்ட் சரண்டர் தான்”,என்றவனுக்கு தனக்கானவளை சந்திப்பதற்கு தான் இந்த டெல்லி பயணம் என்பது அப்போது புரிந்திருக்கவில்லை.
தொடரும்...